தொடர்பாளர்கள்

Thursday, October 8, 2009

திருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா?

திருக்குறளில் பகவன் - பகவன் வட சொல்லா?

இரா.திருமாவளவன்

திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பயிலப் பட்டுள்ள பகவன் எனும் சொல்லை பலரும் பல காலும் பல வகையிலும் ஆய்வு செய்து கருத்து கூறியுள்ளனர்.
அது தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறு கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது.

பகு எனும் அடிச்சொல்லின் அடிப்படையில் பகவன் எனும் சொல் பிறந்துள்ளது. பகு - பக- பகவு ----- பகவு + அன் = பகவன்
பகு எனின் விலக்கு என்று பொருளாகும். பிரித்தல் நீக்கல் விலக்கல் என்று மேலும் இதன் பொருளை விரிவாக்கலாம்.
இருளை விலக்கி ஒளி ஏற்படுவதால் அககாலம் பகு -- பகல் எனப் பட்டது. அப்பகலைத் தரும் கதிரவன் பகலவன் என்றும் பகல் செய் செல்வன் என்றும் அழைக்கப் பட்டது.

பகலும் பகலவனும் எப்படி உருவாகினவோ அப்படியே பவகவனும் உருவாகியது. ஒளியைத் தந்து இருளை விலக்கியதால் கதிரவன் பகலவன் எனப் பட்டது போல , அறிவை நல்கி அறியாமை இருளை அகற்றும் அறிவுடைய பெருமக்கள் பகவன் எனப் பட்டனர். பகுத்து உணர்த்தும் சான்றோன் பகவன் எனப் பட்டான்.
இது ஏற்புடைய கருத்தாகும். தமிழரின் பகவன் எனும் அருந்தமிழ்ச் சொல்லே பின்னால் வடமொழியில் திரிபுற்று பகவான் ஆகியது. எனவே பகவன் பண்டைத் தமிழ் சொல்லே என்பதை நாம் அறிதல் வேண்டும். இது வட சொல் அன்று. இது பரம்பொருளைக் காட்டும் சொல்லும் அன்று. தமிழ் அறிவனை உணர்த்தும் தூய தமிழ் சொல்லாகும்.

1 comment:

  1. தெளிவான விளக்கம். பயனான இடுகை. மிக்க நன்றி.

    ReplyDelete