தொடர்பாளர்கள்

Friday, November 27, 2009

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை


தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2009


எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.

அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக் காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது. தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நிலஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக்கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

எமது மக்களின் இந்த இழப்புக்களையும், ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.

அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதான இனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள். அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின. உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற் கருக்கினார்கள். முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின் முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்தது. ஈழத்தமிழரின் அழிவையும் அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின் போராட்டங்கள் பலனற்றுப் போயின.

உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றி, மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.

சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல், இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தன.

இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.

இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.

இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல், உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல், தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பது, அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரை, புலிகளின் பிடியில் இருந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம் வேடிக்கையானது. தமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு , சொத்திழப்பு, வாழ்விட இழப்பு, சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.

எமது பாசமிகு தமிழ் மக்களே,
வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவது, கைது செய்வது, கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.

1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம், குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரிய மனிதப்பேரழிவைச் செய்து, தமிழர்களின் மனவுறுதியை உடைத்து, தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம், தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்து, இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடு, மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும், சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
அதேநேரம், தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்து, புதிய சூழல்கள், புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளை, எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான தமிழீழ மக்களே, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ராம் அவர்களின் உரைக்கு பழ. நெடுமாறன் ஜயா கடும் கண்டனம்

ராம் அவர்களின் உரைக்கு பழ. நெடுமாறன் ஜயா கடும் கண்டனம்

விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை சிங்கள இராணுவ நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கும் ஒருவரின் அறிக்கையாக காட்சித் தருகிறதே தவிர பிரபாகரனின் தலைமையில் நம்பிக்கைக் கொண்டுப் போராடிய ஒரு போராளியின் அறிக்கையாக அமையவில்லை.

ஈழப் போர் முடிந்து 7 மாத காலமாக வாயையே திறக்காத ராம் இப்போது திடீரென குழப்பமான அறிக்கைக் கொடுப்பதின் நோக்கம் என்ன? உலகத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் உளவியல் ரீதியான போரில் ஓர் ஆயுதமாக ராம் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரபாகரன் மரணமடைந்து விட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென செல்வராசா பத்மநாபன் 7 மாதத்திற்கு முன் அறிவித்த போது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதை ஏற்கவும் இல்லை. கடைப்பிடிக்கவும் இல்லை. மாறாக பிரபாகரன் மீது நம்பிக்கை வைத்து கொதித்தெழுந்தனர். உலக நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் எழுச்சிமிக்கப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். சிங்கள அரசு அப்பாவி தமிழ் மக்களைப் படுகொலை செய்ததை உலக நாடுகள் கண்டிப்பதற்கு முன் வந்தன. ராஜபக்சேயும் அவருடைய கூட்டாளிகளையும் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டுமென்ற குரல் வலுத்தது. இதை திசைத் திருப்பவும் உலகத் தமிழர்களின் எழுச்சியை அடக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்த சதிக்கு ராம் போன்றவர்கள் துணை போனது வெட்கக் கேடானதாகும்.

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க தக்கத் தருணத்தையும் தலைவரின் கட்டளையையும் எதிர்பார்த்து மறைந்திருக்கும் போராளிகளையும் மறைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெளிக் கொணரவும் அவர்களின் மனஉறுதியை சீர்குலைக்கவும் இத்தகைய பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு உலகத் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.
புலிகள் சார்பில் அறிக்கைக் கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அக, புற சூழ்நிலைகள் கனியும் போது பிரபாகரன் வெளிப்பட்டு அறிக்கைத் தருவார்.

சிங்கள இராணுவ வெறியர்களால் சீரழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் கடமை உலகத் தமிழர்களுக்கு உண்டு என்பதை ஒரு போதும் மறவாமல் நம்மாலான அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டிய வேளையில் நம்மை திசைத் திருப்பும் வகையில் திட்டமிட்டு வெளியிடப்படும் அறிக்கைகளைக் கண்டு யாரும் குழப்பமடைய வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்திய - சிங்கள உளவுத் துறைகள் தொடர்ந்து தமிழர்களை குழப்புவதற்காக நடத்தும் உளவியல் போரை உறுதியாக எதிர் கொள்ள நாம் தயாராவோம். இந்த போரில் ஏற்பட்டப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் பிரபாகரன் வழிகாட்டுவார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு தயாராகும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்று பட்டு நின்று போராடுவதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும்.

Saturday, November 21, 2009

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் இரண்டகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் இரண்டகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!

தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.
அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு. சீனா, பாகிஇதான், இஇரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.

ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கொடும் பழி துலீற்றி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (சுஹறு) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.

அது மட்டும் அல்ல, ‘பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார்.

இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார். ரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது. இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.’

‘தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார். அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்’ என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.

கருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றி நீட்டி முழக்கி இருக்கிறார். இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் துலீதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நுலீலில் எழுதி இருக்கிறாரே? டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு? அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான். கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.

காலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது. தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.

தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர் பெற்ற புகழை, இளங்கோ, கம்பன், கரிகாலன், இராஜராஜ



ன் பெற்ற புகழை, எங்கள் மாவீரன் பிரபாகரன் பெற்று இருக்கிறார். உலகமெலாம் வாழுகின்ற தமிழர்களின் இதயக்கோயிலிலே அவர் வீற்று இருக்கிறார். அவரை கருணாநிதி கொச்சைப் படுத்தி விட முடியாது. ஆனால், உண்மைகளைத் தமிழர்கள் அறிவார்கள். ஒரு அரசை நிறுவி, முப்படைகளை உருவாக்கி, அரசுத்துறைகளை அமைத்து இயக்கி, தமிழ் ஈழ அரசை உலகம் ஏற்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திய பிரபாகரன், போர்க்களத்திலும், ராஜதந்திரத்திலும் தன்னிகர் அற்ற தலைவராக விளங்குகிறார். ஒழுக்கத்தின் சிகரமாக, நேர்மைக்கும் சத்தியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்பவர். புரட்சிகளை நடத்திய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் உள்ளதை நான் படித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தவறுகளும் இல்லாத தலைவனான - மாவீரர் திலகமான பிரபாகரனைக் கொச்சைப்படுத்த முயல்கிறார் கலைஞர் கருணாநிதி.

2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்?

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது.

‘தாயகம்’ வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.

Monday, November 16, 2009

வீழ்ந்த ஈழம் இனி எழும், வெல்லும், காலம் அதைச் சொல்லும். தமிழகப் பெருந்தலைவர் ஐயா பழ. நெடுமாறன்

2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது. போரின் கடைசிக் கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் மொத்தம் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தார்கள். 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தும் அவரது முக்கியத் தளபதிகள் குறித்தும் பல்வேறுபட்ட செய்திகள் மாறி மாறி வெளியிடப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உள்ளங்களைச் சோர்வடைய வைத்தது.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் தங்கள் இன்னுயிரை ஈந்தும், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தும், அனுபவித்த துயரங்களும், துன்பங்களும், தியாகங்களும் ஈடு இணையற்றவை. ஆனால் இந்தத் தியாகங்கள் வீணாகிவிடுமோ, தமிழீழத் தாயகக் கனவு சிதைத்துவிடுமோ என்ற கவலை தமிழர்களின் உள்ளங்களைக் குடைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள வதை முகாம்களில் சிக்கிச் சீரழியும் தமிழர்களின் நிலை குறித்து உலகத் தமிழர்கள் சொல்லமுடியாத வேதனை அடைந்திருக்கிறார்கள்.

மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய-சிங்கள அரசுகளின் உளவுத் துறைகள் தமிழர்களின் உளவியலைச் சிதைக்கும் வகையில் பொய்யான செய்திகளைத் தொடர்ந்து பரப்புவதில் ஈடுபட்டிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை கொல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்தச் செய்திகளை யெல்லாம் பொய்யாக்கி மீண்டும் மீண்டும் அவர் உயிர்த்தெழுந்து நெடிதுயர்ந்து நிற்பதோடு சகப் போராளிகளையும் மக்களையும் பேரெழுச்சி பெறவைக்கிறார்.

35 ஆண்டுகளுக்கு முன்பு தனது 17ஆம் வயதில் ஒரே ஒரு கைத் துப்பாக்கியுடனும் விரல்விட்டு எண்ணக் கூடிய சக தோழர்களுடனும் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள், டோரா படகுகள், போர் விமானங்கள் போன்ற நவீன ஆயுதங்களுடன் சிங்கள இராணுவம் வலிமை மிக்கதாக இருந்தது. ஆனாலும் பிரபாகரன் கொரில்லா நடவடிக்கையில் ஈடுபட்ட கட்டுப்கோப்பு நிறைந்த இயக்கமாக விடுதலைப்புலிகளை உருவாக்கி சிங்கள இராணுவத்துடன் இடைவிடாது மோதி அவர்களை அச்சமடைய வைத்து முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க வைத்தார். திடீர் திடீர் கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் சிங்கள வீரர்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தினார். அதே வேளையில் அரசியல் ரீதியாக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி விடுதலைப் போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றினார். புலிகளின் தியாகமும் வீரமும் நிறைந்த நடவடிக்கைளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்தார்கள். அதன் விளைவாக அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவவும் தோள் கொடுத்து துணை நிற்கவும் முன்வந்தார்கள்.

1970 களில் விடுதலைப் புலிகளை அடக்குவதற்காக அதிபர் ஜெயவர்த்தனா தனது மருமகனான பிரிகேடியர் வீரதுங்காவுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்து 6 மாத காலத்தில் பயங்கர வாதிகளை அடக்கிவரும்படி ஆணையிட்டார். அவருக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். வட மாநிலம் முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டது. மிகக் கொடூரமான முறையில் இராணுவம் மக்களை, குறிப்பாக இளைஞர்களை வேட்டையாடியது. ஆனாலும் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தனவே தவிர குறையவில்லை.

இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பெருமளவில் ஒரு படையெடுப்பை நடத்தி சிங்கள இராணுவம் வடமராச்சி பகுதியை ஆக்கிரமித்தது. இராணுவ பலம் வாய்ந்த எதிரியை முறியடிக்க மில்லர் என்ற கரும்புலியை பிரபாகரன் உருவாக்கி நெல்லியடி இராணுவ முகாமை அடியோடு தகர்த்தார். நூற்றுக்கணக்கான வீரர்கள் மாண்டு மடிந்த நிகழ்ச்சியைக் கண்டு சிங்கள அரசு திகைத்தது. கரும்புலிகளாக இளைஞர்கள் மாறி மரண பயம் இல்லாமல் எதிரியைத் தாக்கி நடுநடுங்க வைத்தார்கள். புலிகளை ஒழித்துவிட முடியவில்லை

புலிகள் வலிமை பெற்று வருவதை உணர்ந்த சிங்கள அரசு இந்தியாவுடன் சேர்ந்து உடன்பாடு என்ற பெயரால் சதித்திட்டம் வகுத்து இந்தியப் படைகளைக் கொண்டுவந்து இறக்கியது. அமைதிப்படை என்ற பெயரால் வந்த படை விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அடியோடு ஒடுக்குவதில் முனைந்து ஈடு பட்டது. தமிழீழப் பகுதி முழுவதிலும் முக்கிய நகரங்களிலும் சிற்றூர்களிலும் 600க்கும் மேற்பட்ட இராணுவ முகாம்களை இந்தியப் படை அமைத்தது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மிக நவீன ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனர். புலிகளின் நிலைகள் மீது அலை அலையாகப் படையெடுப்பு கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய இராணுவத்தின் சிறப்பு இராணுவப் பிரிவுகளையும், மலைக் காடுகளில் போராடும் பயிற்சி பெற்ற அதிரடிப் படை அணிகளையும் புலிகளுக்கு எதிராக ஏவிவிட்டது.

இந்திய-இலங்கை உடன் பாட்டினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த திலீபனின் போராட்டம் இந்தியாவைப் பற்றிய ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை சிதறடித்தது. தொடர்ந்து புலேந்திரன், குமரப்பா உட்பட 12 முக்கிய புலிகள் இந்தியாவின் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட நிகழ்ச்சியும் இந்தியா பற்றிய மாய வலையை முற்றிலுமாக அறுத்தெறிந்தன.

இந்திய இராணுவம் சிங்கள இராணுவத்தை மிஞ்சிய அளவில் தமிழர்களைப் படுகொலை செய்தது. யாழ்ப்பாணப் போரில் மட்டும் 2000 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட னர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடு கள் தரைமட்டமாக்கப்பட்டன. நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் வன் முறைக்கு ஆளாயினர். யாழ் மருத்துவ மனையில் நடத்தப்பட்ட படுகொலை காலத்தால் அழியாத அவமானக் கறையை இந்தியாவின் மீது படிய வைத்தது.

இந்திய இராணுவ வரலாற்றில் அது சந்தித்த போர் நெருக்கடிகளில் புலிகளுடன் நடத்திய போரே நீண்ட காலப் போராக நீடித்தது. இரண்டாண்டு வரை நீடித்த இந்தப் போரில் இந்திய இராணுவம் தனது நோக்கங்கள் எதையுமே பூர்த்தி செய்ய முடியவில்லை. புலிகள் இயக்கத்தை முற்றாக அழிப்பது, புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்வது. புலிகளிடமிருந்து மக்களை அன்னியப்படுத்துவது ஆகிய அதனுடைய நோக்கம் எதுவுமே நிறைவேறவில்லை. மாறாக கொரில்லாப் படை என்ற நிலையிலிருந்து புலிகள் மரபு வழிப் படையாக பிற்காலத்தில் உருவாவதற்கு இந்தப் போர் உதவியது. ஆயுதங்கள் இல்லாமல் தத்தளித்த புலிகள் இந்திய இராணுவ ஆயுதங்களைப் பலவகையிலும் ஏராளமாகக் கவர்ந்தார் கள். நகர்ப்புறக் கொரில்லாக்களாக இருந்த புலிகள் வன்னிக் காடுகளுக்கு தங்கள் தளங்களை மாற்றினார்கள். அதுவே அவர்களுக்கு பெரும் பாது காப்பாகவும் வலிமையான அரணாகவும் அமைந்தது. புலிகளை அழித்து விட முடியவில்லை

இந்திய இராணுவத்துடனான போரில் 654 புலிகள் மாண்டனர். மற்றும் கணிசமான பகுதியினர் சிறைப்பிடிக்கப்பட்டு அல்லது சிதறி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். பிரபாகரனுடன் வெறும் 50 பேர் மட்டுமே இருந்தார்கள் என்பதும் அவர்களைக் கொண்டே கொரில்லாப் போரில் நவீன உத்திகளைக் கையாண்டு இந்தியப் படையை அவர் திணறடித்தார் என்பதும் வரலாறு. ஒருபுறம் இந்திய இராணுவத்துடன் போராடிக்கொண்டு மறுபுறம் தனது படையணிக்கு ஏராளமான இளைஞர் களை ஈர்த்து வன்னிக் காட்டில் அவர் களுக்குப் பயிற்சியளித்து வலிமை வாய்ந்த ஒரு படையை மீண்டும் அவர் கட்டியெழுப்பினார்.

வியட்நாமில் அமெரிக்க-பிரெஞ் சுப் படைகளை எதிர்த்துப் போராடிய ஹோசிமின் அவர்களுக்கு செஞ்சீனமும், சோவியத் ஒன்றியமும் துணை நின்றதால் அன்னியப்படைகளை வெளியேற்ற முடிந்தது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்துப் போராடிய கொரில்லா இயக்கங்களுக்கு அமெரிக் காவும், பாகிஸ்தானும் உதவியதால் சோவியத் படைகளை வெளியேற்ற முடிந்தது.

ஆனால் இந்தியப் படைகளை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு உதவ உலகில் எந்த ஒரு நாடும் முன்வரவில்லை. ஆனாலும் தனியே மனஉறுதியுடன் போராடி இந்திய இராணுவத்தை வெளியேற வைத்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உரியது. இதன் காரணமாக உலகின் தலைசிறந்த கொரில்லா இயக்கம் என்ற மதிப்பை புலிகள் இயக்கம் பெற்றது.

இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாமல் போன இந்தியா, புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாக வெல்லத் திட்டமிட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில் போலியான மாகாணச் சபைத் தேர்தல் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி தனது கையாட்களான போட்டிக் குழுக்களைக் கொண்டு மாகாண அரசு ஒன்றையும் அமைத்தது. ஆனாலும் இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் புலிகள் இயக்கம் பேச்சு நடத்தி இந்தியப் படை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை ஓங்கி ஒலிக்க வைத்தது. இதன் விளைவாக இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கப்பட்டது.

இராஜீவ் காந்தி தோல்வியடைந்து வி.பி.சிங் பிரதமரானவுடன் இந்தியப் படை திரும்பப் பெறப்பட்டது. அந்தப் படைகளுடனேயே இந்திய கைப் பொம்மை வரதராசப் பெருமாள் கூட்டமும் இந்தியாவுக்குத் தப்பி ஓடியது. இராணுவ ரீதியாகவும் இராச தந்திர ரீதியாகவும் இந்தியாவை பிரபாகரன் முறியடித்தார். புலிகள் வீழ்ந்து விடவில்லை

முதல் 10 ஆண்டுகளில் கொரில்லாப் போர் முறையைக் கையாண்ட விடுதலைப் புலிகள் அடுத்த 10 ஆண்டுகளில் மரபு வழி இராணுவமாக உருவெடுத்தனர். தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளுடன் போராடி பல வெற்றிகளைப் பெற்று தங்கள் தாயகத் தின் பெரும் பகுதிகளை மீட்டெடுத்தனர். தமீழீழப் பகுதியில் தனி ஆட்சியை நிறுவினார்கள்.

இந்த நிலைமையில் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரமான யாழ்ப்பாணத் தைக் கைப்பற்றுவதன் மூலம் தமிழர் களின் மனஉறுதியைக் குலைக்கவும் புலிகளின் முதுகெலும்பை முறிக்கவும் திட்டமிட்டு 1995ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பெரும் படையெடுப்பை சிங்கள இராணுவம் தொடங்கியது. சிங்களரின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கத் திட்டமிட்ட பிரபாகரன் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவதென முடிவுசெய்தார். அந்த முடிவை ஏற்று புலிகள் மட்டுமல்ல 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட யாழ் மக்களும் வெளியேறிய நிகழ்ச்சி வரலாறு காணாததாகும். ஓர் இடத்தைக் கைப்பற்று வதைவிட அதைத் தக்க வைப்பது மிகக்கடினமானது என்பதை சிங்கள இராணுவம் காலம் கடந்து உணர்ந்தது. யாழ்ப்பாணத்தை தங்கள் வசம் வைத்துக்கொள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களைப் பயன்படுத்த வேண்டி நேரிட்டது. சிங்கள வீரர்களில் கணிசமானவர்களை இவ்வாறு முடக்கிய பிரபாகரன் 1996ஆம் ஆண் டில் தொடங்கி 4 ஆண்டு காலத்திற்குள் மாங்குளம், பரந்தன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெற்றிலைக்கேணி, பூநகரி போன்ற முக்கிய இராணுவ முகாம்களை வீழ்த்தினார். வவுனியா, வடமராச்சி, தென் மராச்சி கிழக்கு மாநிலத்தில் பெரும் பகுதிகள் ஆகியவற்றைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இறுதியாக வெல்லப்படமுடியாது என்று கருதப்பட்ட ஆனையிறவு முகாமைத் தகர்த்து சிங்கள இராணுவத்துக்கு புலிகள் மரண அடி கொடுத்தனர். இந்தப் போர்களில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவ வீரர்கள் மாண்டனர். பல நூறு கோடி பெறுமான ஆயுதங் களைப் புலிகள் கைப்பற்றினர். புலிகளை ஒழித்துவிட முடிய வில்லை

வெற்றிக்கு மேல் வெற்றிபெற்று வந்த போதிலும் பிரபாகரன் சமாதானத் திற்கான கரங்களை நீட்டத் தயங்க வில்லை. சிங்கள அரசுடன் தனித்துப் பேச தான் விரும்பவில்லை. மூன்றாவது நாடு ஒன்றின் முன்னிலையில் பேசுவ தற்குத் தயார் என்று பிரபாகரன் அறிவித்தார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அதிபர் சந்திரிகா மறுத்தபோது சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தந்தின் விளைவாக நார்வே நாட்டின் மத்தியஸ்தத்தை அவர் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலக அரங்கில் பிரபாகரனுக்கு கிடைத்த இராசதந்திர வெற்றி இதுவாகும். கடந்த 10 ஆண்டு காலத்தில் ஆகாய கடல்வெளிச் சமர், மணலாறு சமர், தவளை நடவடிக்கை, கொக்குத் தொடுவாய் சமர், இடிமுழக்கம், ஓயாத அலைகள்-1, சத்ஜெய 2, 3 முறியடிப்பு சமர், பரந்தன், ஆனையிறவு சமர், வவுனத் தீவு சமர், கிளிநொச்சி, பரந்தன் முகாம்கள் மீதான ஊடுருவல் தாக்குதல், ஓயாத அலைகள்-2, ஜெயசிக் குறு முறியடிப்புச் சமர், ஓயாத அலை-3, ஓயாத அலைகள்-4, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல சமர்கள் பிரபாகரனின் இராணுவத் திறமைக்கு சான்று கூறுகின்றன. அதிலும் வெல்லப்படமுடியாதது என்று கூறப்பட்ட ஆனையிறவு சிங்கள இராணுவ முகாமை தரை, கடல் மார்க்கமாகச் சுற்றி வளைத்து விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் உலக இராணுவ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படு கிறது. இரண்டாம் உலகப்போரின் போது பிரான்சில் உள்ள நார்மண்டி கடற் கரையில் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் பெருமளவில் தரையிறங்கி ஜெர்மானியப் படைகளை முறியடித்து பெர்லின் வரை விரட்டிச் சென்றன. நார்மண்டி தரை யிறக்கத்துடன் புலிகளின் ஆனையிறவு இறக்கத்தை உலக இராணுவ விமர்சகர் கள் இன்றும் ஒப்பிடுகின்றனர். உலக நாடுகளின் இராணுவ கல்லூரிகளில் இது வியப்புடன் போதிக்கப்படுகிறது.

பிரெஞ்சுப் படைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு சரணடைய வைத்த வியட்நாம் ஜெனரல் ஜியா என்பவரின் போர்த் திறமைக்கு நிகரானது பிரபாகரனின் திறமை என இராணுவ விமர்சகர்கள் போற்றுகின்றனர்.

இந்திய-இலங்கை உடன்பாட்டின் சூத்திரதாரிகளில் ஒருவரும் பிரபாகரனை சுட்டுக்கொல்லுமாறு இந்தியப் படைத் தளபதிக்குக் கூறியவருமான ஜே.என். தீட்சித் பிற்காலத்தில் எழுதியுள்ள புத்தகத்தில் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்:

‘புலிகளின் இயக்கத்தின் தலை வரான பிரபாகரனிடம் காணப்படும் கட்டுப்பாடு, மனஉறுதி, ஈழத்தமிழரின் மீட்சி என்ற இலட்சியத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்துள்ளவை ஆகியவை சிறந்த குணாதிசயங்கள் ஆகும். இவர் யாராலும் எப்படி விமர்சிக்கப்பட்டாலும் நெஞ்சில் சுதந்திர தாகம் சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருப்பதையும் அதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் சுபாவமும் இவரிடம் உள்ளது என்பதையும் இயற்கையான இராணுவ வல்லமையைக் கொடையாகப் பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைப்போல அமைதிப் படையின் தளபதிகளாக இருந்த லெப்.ஜெனரல் தீபிந்தர் சிங், லெப். ஜெனரல் சர்ரேஷ் பாண்டே போன்றவர் களும் பிரபாகரனை வியந்து பாராட்டியுள்ளனர்.

இன்னல்களும் இடர்களும் சூழ்ந்த நெருக்கடியான காலகட்டங் களிலும் தளராத தன்னம்பிக்கையுடனும் குன்றாத உறுதியுடனும் செயலாற்றுவது தான் பிரபாகரன் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம் என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கமும் குறிப்பிட்டிருக்கிறார்.

பல உள்நாட்டு, வெளிநாட்டு சக்தி கள் பிரபாகரனைத் திசை திருப்பவும், விலைக்கு வாங்கவும் செய்த முயற்சி களும் – விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தவும் பலர் மேற்கொண்ட கடும் முயற்சிகளையெல்லாம் முறியடித்துத்தான் பிரபாகரன் புலிகள் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது தன்னலமற்ற நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களை ஒரு கட்டுக்கோப்பான தேசிய இனமாக மாற்றி விடுதலைக்காகப் போராடுகிற முன்னணி அணியாக்கியவர் பிரபாகரனே. தமிழ்த் தேசிய இனத்தை ஒன்றுபடுத்துகிற மாபெரும் சக்தி மட்டுமல்ல அவர் அதன் உருவகமும் அவரேதான். தமிழர் தேசிய எழுச்சியின் வடிவமாக அவர் விளங்குகிறார்.

அவர் மரணத்தை வென்றவர். 17ஆம் வயதில் இருந்து சாவுடன் போராடி வருகிறார். தனது மக்களின் விடுதலை என்ற உன்னத கோட்பாட்டிற் காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அதற்காகவே போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்வதற்கும் அவர் துணிந்திருக்கிறார். வெற்றிகளும் தோல்விகளும், பிரதேசங் களை இழப்பதும் மீண்டும் வெல்வதும் அவரை ஒருபோதும் பாதித்ததில்லை. உடனிருந்த போராளிகளை களத்தில் இழந்தபோதும். அவரது மனஉறுதி அதிகமாகியிருக்கிறதே, தவிர, குறைந்த தில்லை. அதைப்போல துரோகங்களும் அவரைத் துவளவைத்ததில்லை.

முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போராட் டத்தில் அடுத்து என்ன என்பதை யூகித்தறிவதிலும் அதற்கு மாற்று என்ன என்பதை முடிவு செய்வதிலும் அவருக்கு நிகர் அவரேதான். போரின் கடைசிக் கட்டத்தில் உருவாகப்போகும் நெருக்கடி களை அவர் யூகித்தறிந்திருந்தார். அதனால்தான் பதிலடித் தாக்குதலில் வலிமையை விரயம் செய்யாமல் தனது தோழர்களையும் ஆயுதங்களை யும் பாதுகாப்பதில் குறியாக இருந்தார். புலிகளின் ஆயுதக் குவியல் களை சிங்கள இராணுவத்தினரால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. பீரங்கிகள், டாங்கிகள், கவச வாகனங்கள், மிக விரைவுப் படகுகள், விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை எல்லாம் என்ன ஆயின? எங்கு மறைந்தன? இந்த கேள்விகளுக்குரிய விடையைத் தேடித்தான் சிங்கள-இந்திய உளவுத் துறைகள் படாத பாடுபட்டுக்கொண்டி ருக்கின்றன.

நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கியதிலிருந்தே புலிகளின் குறி இராணுவ ரீதியான வெற்றிகளிலிருந்து விலகி சர்வதேச ஆதரவு என்பதன் மீதே குறியாக இருந்து வந்தது. புலிகளின் தற்போதைய பின்னடைவாக கருதப் படுகிற விசயங்கள் அனைத்துமே புலிகளின் இராச தந்திர காய் நகர்த்துதலுக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுக்கப்போகும் முக்கிய அம்சங்களாகும். சர்வதேச ரீதியிலான ஆதரவே தமிழீழம் விரை வில் உருவாக வழிவகுக்கும் என்பதை புலிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

புலிகளுக்கு தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கு சிங்கள இராணுவத்தின் வலிமையோ – அதற்குத் துணையாக நின்ற சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா போன்ற அணு ஆயுத வல்லரசுகளும் மேலும் 15 நாடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ உதவியும் மட்டுமே காரணமல்ல. உலக சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் முக்கியமான காரண மாகும். அமெரிக்கா மீது செப்டம்பர் 11ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைச் சிறிதும் சகித்துக்கொள்ளமுடியாத சூழ் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. பயங்கர வாத அமைப்புகளுக்கும் தேசிய விடுத லைக்காகப் போராடும் அமைப்பு களுக்கும் இடையே உள்ள வேறுபாடு களை இது மங்கச் செய்துவிட்டது. எனவே சிங்கள அரசு இந்தச் சந்தர்ப் பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான தனது போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராகச் சித்திரித்து பல நாடுகளின் ஆதரவை பெற்றது. 30க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் இயக்கத்தை பயங்கர வாத அமைப்பு என்று கூறி தடை செய் துள்ளன. இதன் மூலம் புலிகள் இயக் கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிங்கள அரசு மறைமுகமாகப் பெற்றுவிட்டது.

இந்த வேண்டாத சூழ்நிலையை மாற்றுவதற்கு இப்போது வழி பிறந் துள்ளது. இலங்கையின் போர் அவலங்கள் உச்ச நிலை அடைந்தபோது உலக நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் உருவப் பதாகைகளுடனும் வீதிகளில் இறங்கி போர்க்குரல் கொடுத்தார்கள். தமிழகம் உட்பட உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்களின் ஆவேசப் பேரணிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலும் வெளி நாடுகளிலும் 17 தமிழர்கள் தீக்குளித்து தங்கள் உயிர்களைத் தியாகம் செய் தார்கள். தமிழீழப் போராட்ட வரலாற்றில் இத்தகைய ஆதரவு எழுச்சி இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. இந்த தொடர் போராட்டங்களின் விளைவாக மேற்குலக நாடுகள் பலவும் சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கண்டனங்களை எழுப்பின. சிங்கள அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையும் இந்நாடுகளால் எழுப்பப்பட்டன. இலங்கைக் களத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் உலக இராசதந்திரக் களத்தில் பிரபாகரனுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஆசியப் பகுதியில் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் எதிர் துருவங் களாக ஈடுபட்டிருக்கும் சீன-இந்திய ஆதிக்கச் சக்திகள் தமிழர்களுக்கு எதி ராக சிங்கள தேசத்திற்குக் கைகொடுத்தன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய உள்முரண்பாடுகள் நாளுக்கு நாள் கூடுமே தவிர குறையப் போவதில்லை. இந்துமாக் கடலில் இலங்கையின் ஊடாக சீனா காலூன்று வது தனக்கு பேரபாயம் என்பதைக் காலம் கடந்தாவது இந்தியாவும் உணரத் தொடங்கியுள்ளது. அதைப்போல அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இந்துமாக்கடலில் சீன ஆதிக்கம் வருவதை விரும்பவில்லை. மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கு நாடுகளுக்கும் செல்லுகின்ற கடல் மார்க்கம் வணிக ரீதியில் மட்டுமல்ல இராணுவ ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது தங்களின் நோக்கங்களுக்கு அபாயகர மானது என்பதை இந்நாடுகள் உணர்ந்திருக்கின்றன. இதன் விளைவாக வும் உலக அரசியல் மாற்றங்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வெகுவேகமாக உருவாகி வருகின்றன.

பிரபாகரன் காலத்தில் அவர் தலைமையின் கீழ் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்காவிட்டால் இனி ஒரு போதும் வேறு யார் காலத்திலும் அது கிடைக்கப்போவதில்லை என்பதை உலகத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். உலகத் தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டம் உக்கிரமடையும் காலக் கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் தொடங்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.தமிழீழ மக்களும் போராளி களும் இதுவரை செய்துள்ள தியாகம் அளப்பரியது. சின்னஞ்சிறிய தமிழீழத் தின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது இந்தத் தியாகம் அதன் சக்திக்கு மீறியதாகும். மக்கள் தாமாக முன்வந்து தங்கள் மண்ணை மீட்க செய்துள்ள இந்த தியாகம் ஒருபோதும் வீணாகாது. கடந்த 30 ஆண்டு காலத்தில் அந்த மக்கள் அனுபவித்த துயரங்களும் இன்னும் அனுபவித்து வருகிற துன்பங்களும் அவர்களின் உள்ளங்களில் வைரமேற்றி உள்ளன. தங்கள் தலைமுறையிலேயே இந்தத் தன்னிக ரல்லாத தலைவனின் காலத்திலேயே தமிழீழத் தாயகம் விடுதலை பெற்றாக வேண்டும். நமது அடுத்த தலை முறையினர் சுதந்திர நாட்டில் சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும் என்ற மாறாத மனஉறுதியை இந்த மக்கள் கொண்டிருக்கிறார்கள்.

தாயக விடுதலைக்காகக் குடும்பத்திற்கு ஒரு பிள்ளை யைத் தாருங்கள் என பிரபா கரன் கேட்டபோது கொஞ்சமும் தயங்காமல் தாய்மார்கள் தாங்கள் பெற்ற புதல்வர்களையும் புதல்வி களையும் உச்சிமுகர்ந்து முத்த மிட்டு அனுப்பி வைத்தனர். செல்பவர்கள் மீண்டும் வராம லும் போகலாம் என்பதைத் தெரிந்தே அவர்கள் பிள்ளை களைத் தியாகம் செய்ய முன் வந்தனர். அதைப்போல விடுதலை வேள்வியில் தான் பெற்ற மகனையும் அர்ப்பணித்த தங்கள் தலைவனைக் கண்டு அந்த மக்கள் நெக்குருகிப் போயிருக்கிறார்கள்.

வயதான தனது பெற்றோரைக் கூடப் பாதுகாக்க பிரபாகரன் முன் வரவில்லை. மக்களுக்காவது அவர் களுக்கும் ஆகட்டும் என்ற உறுதியோடு இருக்கும் தலைவனைக் கண்டு நெஞ்சு நெகிழ்ந்துள்ளனர். முள்வேலி முகாமில் வதைபடும் இலட்சக்கணக்கான மக்களோடு அந்த மாவீரனைப் பெற்ற பெற்றோரும் துன்பங்களை அனுபவித்து வருவதை நேரில் காணும் மக்கள் தங்கள் தலைவனை முன்னிலும் அதிகமாக நேசிக்கிறார்கள். வாராது போல் வந்த மாமணியாகத் திகழும் இந்தத் தலைவனின் கீழ் அனைத்துவகைத் தியாகங்களையும் செய்ய அவர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள்.

வீரமே ஆரமாகவும் தியாகமே அணியாகவும் கொண்ட அந்தத் தலைவன் இவர்களின் கனவை நிச்சயம் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை அவர்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்திருக்கிறது. எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்கொள்ள முடியாத தாக்குதலைத் தருவதுதான் பிரபாகரனின் சிறந்த போர் உத்தியாகும். வீழ்ந்த ஈழம் இனி எழும், வெல்லும், காலம் அதைச் சொல்லும்.

Wednesday, November 11, 2009

ஊழினை வென்ற பெருந்தலைவர்


ஊழினை வென்ற பெருந்தலைவர்

ஆக்கம்
இரா.திருமாவளவன்



1.0 தமிழினம் நாகரிக முதிர்ச்சி அடைந்த பழம் பேரினம்.

இவ்வுலகில் வரலாற்றுப் பெருமை மிக்க இனங்களுள் தொன்மையும் முன்மையும் கொண்ட பழம் பேரினம் தமிழினமாகும்.

தனித்தன்மை கொண்ட உயர்தனிச்செம்மொழியும், நயத்தகு நாகரிகம் கொண்ட பண்பாடும், ஈடு இணை சொல்ல முடியாத வீரமும் அறவாழ்வும் இலக்கிய வளமும் எல்லா செல்வமும் கொழித்த எழில்மிகு நாடும் கொண்ட பேரினமே தமிழினம்.

சீரும் சிறப்பும் பெற்று, ஒப்பாரும் மிக்காரும் இல்லா வகையில் ஓங்கிய புகழ் சொல்லி வாழ்ந்தவன் தமிழன் என்பதை, தமிழ் கூறு நல்லுலகில் பொன்னே போல் கண்ணே போல் காக்கப் பெற வேண்டிய இலக்கியங்கள் மெய்ப்பிக்கின்றன. இந்திரர் அமிழ்த மெனினும் தனித்துண்ணா பெரும் பண்பும், பெரியோரென்று வியக்காமலும் சிறியோரென்று இகழாமலும் வாழ்ந்த மாண்பும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுமைச் சிறப்பும் மானமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த மறமாண்பும் இவ்வினத்திற்கன்றி யார்க்கு வரும்.

2.0 தமிழர் இன்று அடிமையாயினர்.

அனைத்தாலும் சிறப்புற்று இவ்வுலகில் மகிழ்ந்துலாவி வாழ்ந்த நம் அருந்தமிழ் இனம் இன்று எவ்வாறு உள்ளது? எல்லாம் இருந்து செல்வச் செழிப்பால் கொழித்து வாழ்ந்த பெருஞ்செல்வன் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த நிலையே இற்றைத் தமிழர் நிலை. குமரிப் பெருநிலத்தில் 49 நாடுகள் வைத்து ஆண்டவன் இன்று ஒரு துளிமண் கூட இல்லாமல் வாழ்கிறான். கி.பி. 1025 ஆம் ஆண்டு கால வட்டத்தில் தென்கிழக்காசியப் பகுதிகளில் பதினையாயிரம் தீவு நாடுகளைத் தன்னகப் படுத்தி வாழ்ந்தவன் இராசேந்திரச் சோழன். கடாரப் பேரரசை இவ்வட்டாரத்தில் நிறுவி தன் ஆற்றலை வெளிக்காட்டிய தமிழனுக்கு இன்று ஒரு துளி மண் கூட சொந்தமில்லை.

தமிழினம் ஆளுமை இழந்த இனமாகவும், அதிகாரம் இழந்த இனமாகவும் அரசினை இழந்த இனமாகவும் பிறரால் ஆளப்படும், அடிமைப்படுத்தப்படும் இனமாகவும் இன்று கிடக்கின்றது.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

என்பது தமிழ்மறை

தன் கையில் இருந்த வேலையும் களிற்றின் மேல் எறிந்து வெறுங்கையனாக நின்ற போது தன் மார்பில் பாய்ந்த வேலினை மிக மகிழ்வோடு பற்றி போர் புரிந்தானாம் வீர மறவன் ஒருவன். இது திருக்குறள் கூறும் பண்டைத் தமிழனின் வீரம் அத்தகு வீர மரபினர் பிற்காலத்தில் அயலார்க்கு அடிமை பட்ட வரலாறே வியப்பிலும் வியப்பானது. ஆரியர்க்கும் மோரியர்க்கும் முகலாயர்க்கும் ஆங்கிலர்க்கும் தம்மில் பிரிந்த திராவிடர்க்கும் அடிமைப்பட்டு மிடிமையுற்று எல்லாம் இழந்தனர் தமிழர். வீரமிக்க இனம் வீறு கொண்ட இனம் எதிர்த்துப் போரிடும் வல்லமையின்றி அஞ்சியஞ்சிச் சாகும் இழி நிலைக்கு ஆளானது.

தமிழனை அடிமைப்படுத்தியவர்கள் தமிழனின் குருதியை உறிஞ்சினர். பல்லாயிரக் கணக்கானத் தமிழரைத் தம் நாட்டு நலனுக்காகப் போர்ப்படையில் சேர்த்து அவரின் எதிரிகளோடு மோதவிட்டனர். பிரஞ்சியர் படையிலும் ஆங்கிலேயர் படையிலும் சுபாசு சந்திர போசு படையிலும் சேர்ந்து அவர்களுக்காகப் போரிட்டு மடிந்த தமிழர் பலர். மலேசியாவில் சப்பானியர் நலனுக்காக ஆயிரக் கணக்கானவர் சயாமிய தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பொருட்டுக் கட்டாயமாகக் கொண்டு செல்லப் பட்டு திரும்பி வராமலேயே இறந்து போயினர்.

'நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைக் கெட்ட மனிதரை நினைத்து விட்டால் '

என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடியது போல வீரத்தோடு வாழ்ந்த இனம் வீர மரபணுவையே இழந்த இனமாகப் பின்னால் இவ்வுலகில் வாழலாயிற்று.

3.0 ஊழின் வலிமை

முந்தையோர் விட்ட பெரும் பிழையினால் வீரமிகுந்த இனம் கோழை இனமா மாறியது. மாலிக் காபுர் தமிழகத்திற்குப் படையெடுத்து வருகையில் திருச்சியில் ஒரு சிற்றூர் மக்களே அவனுக்கு அஞ்சித் தம்மைத் தாமே தீயிட்டு இறந்து போனார்களாம். அவனுக்கு அஞ்சித்தான் செத்தார்களே ஒழிய எதிர்த்துப் போராடி வீரத்தை நிலை நாட்டிச் சாகவில்லையே! இவ்விழிவினை என்னென்று சொல்வது?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

எனும் குறள் நெறி கூறுமாப் போல ஊழ் எல்லாவற்றினும் வலிமை மிக்கதாக விளங்குகின்றது. முன்னை நம் தமிழப் பேரரசுகள் விட்டப் பிழையினால் பின்னைத் தமிழர்கள் அடிமைப் பட்டதுடன் கோழைகளாயினர்; மோழைகளாயினர். தமிழனின் வீரமரபணு அவன் உடலுக்குள்ளாகவே முடங்கிப் போயிற்று. இஃது ஊழின் வலிமையினால் நிகழ்ந்த கேடு .

இதனால் இவ்வினத்தை மீட்டெடுக்க உரிய தலைமையின்றி ஈராயிரம் ஆண்டுகாலமாக இவ்வினம் அல்லலுற்றது.

4.0 ஊழையும் வெல்லலாம்.

வள்ளுவப் பெருமான் ' ஊழிற் பெருவலி யாவுள? என்ற வினாவினைத் தொடுத்துவிட்டு அதனை வெல்ல இயலவே இயலாதா என்று கேட்கையில் ஏனெனில்லை என்று வழியையும் காட்டுகின்றார்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (குறள் 620 )

எனும் குறளால் தாம் கொண்ட கொள்கையை வேட்கையை நிறைவேற்ற வேண்டும் எனும் தாளாண்மை கொண்ட பெருமக்கள் அதிரடியாக முடியாதென்றதை முடித்துக் காட்டுவர் ; எவராலும் செய்ய இயலாததைச் செய்து செயற்கரிய செய்யும் பெரியராவர் எனும் உண்மையை நாம் உணரலாம்.

செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்குரிய செய்கலா தார்

என்கிறது வள்ளுவம்.

இன்று தமிழன் இழந்து விட்ட நாட்டை மீட்டெடுக்கும் செயற்கரிய செயலைச் செய்யும் பெரியாராகவே நாம் மேதகு தலைவர் பிரபாகரனைப் பார்க்கிறோம்.

நாடாண்ட பழம் பேரினம் தன் சொந்த நாட்டை இழந்து போனால் எத்தகு இழிநிலையை அடையும் என்பதற்கு நம் தமிழினமே மிகப் பெரிய எடுத்துக்காட்டு. இனி இந்த இனத்தை மீட்டெடுக்க வேண்டுமாயின் இந்த இனம் ஆண்ட நாட்டினை மீட்டெடுக்க வேண்டும். இன்றைய உலகில் அது நினைத்துப் பார்க்க முடியாத செயல். ஆனால் அதற்கு அளப்பரிய ஈகங்களைச் செய்தாகல் வேண்டும். உயிரையே தூசென மதிக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட மாவீரர்களை உருவாகினாலன்றி இதனைச் சாதிக்கவியலாது. இத்தகு அருஞ்செயலைச் செய்து சாதித்து காட்டியவர்தான் தலைவர் பிரபாகரன்.

5.0 பிரபாகரன் கண்ட கனவு

சிங்களப் பேரினவாதம் தமிழினத்திற்கு எதிர்ப்பாகச் செய்து கொண்டிருக்கும் இனக்கொடுமைகள் தலைவர் பிரபாகரனின் அகவைக்கும் முந்திய கால நீட்சியைக் கொண்டது. எனவே அவர் தம் குழந்தை பருவம் முதலாகவே இக்கொடுமைகளைக் கண்டு அதனை எதிர்க்க வேண்டும் என்ற அடங்கா வேட்கையைக் கொண்டிருந்தார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு மெய்ப்பிக்கின்றது. எனவே அடக்குமுறைகளினின்று இந்தத் தமிழினத்தை விடுவித்து விடுதலைப் பெற்ற தனித்தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்பது அவருடைய கழி இளமைக் கால கனவாகும். அதற்காக எந்த ஈகத்தையும் செய்யக் கூடியவராக அவர் இருந்தார்.

அவர் கண்ட கனவுக்கு ஏற்ப கால நிலை அவரை உருவாக்கியது. சிங்கள வெறியர்கள் தமிழினத்தின் மீது நிகழ்த்திய வெங்கொடுமைகளால் ஆயிரமாயிரம் வீரமிக்க தமிழ் இளையோர்கள் தலைவரின் பின்னால் அணிவகுக்கலாயினர். போர்க்குணமிக்க வீரமறவர்களை இயல்பாகவே பெற்ற தமிழினத்தில் அத்தகைய தலைமுறை இல்லாது கோழைகளாக பிறப்பெடுத்த காலக் கட்டத்தில் மீண்டும் அவ்வீர மரபினை இவ்வினத்தின் கருவுக்குள் செலுத்திய படைப்பாளியாகவே நாம் பிரபாகரனைப் பார்க்கிறோம்.

6.0 உயிரச்சமற்ற தலைவர்.

அமைதி ஒப்பந்த காலத்தில் உலகில் பல பாகங்களிலிருந்தும் பணியாற்றிய அன்பர்கள் அவரைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அக்கால் அவர் பகிர்ந்து கொண்ட சில செய்திகளை இங்கே பதிவாக்குகின்றேன்.

' அன்பர்கள் அவரோடு நின்று படம் பிடிக்க எண்ணினர். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு நிற்கையில் ஒன்றைக் கேட்டார். "நான் ஏன் இந்த வரி உடையோடு உங்களுடன் நிற்கின்றேன் தெரியுமா?" ...அன்பர்கள் யாரும் விடையிறுக்காமல் அமைதி காத்தனர். "ஏனெனில் உலகில் தமிழன் இதுவரை இவ்வுடையை அணிந்ததில்லை; எனவே நான் அணிய வேண்டும் என்று முடிவெடுத்தேன் அணிந்திருக்கிறேன் " என்றார். அவர் இவ்வாறு கூறியதற்கான பொருள் விளங்கியது. இவ்வினத்தை விடுவிப்பதற்காக வீரத்தோடு போராடும் படையணி ஒன்று உருவாக வில்லை. அதை உருவாக்க வேண்டும் என்பது தலைவரின் கனவு. அதனை நினைத்தவாறே உருவாக்கினார். வெறுமனே உடையைக் குறிப்பதற்காக இவ்வாறு சொல்லவில்லை.

தொடர்ந்து, " இப்போராட்டத்திற்கு நான் முன்னோடியில்லை. எனக்கும் முன்னால் பலர் இருக்கின்றார்கள். சிலர் மறைந்து விட்டனர். சிலர் கைநெகிழ்த்து விட்டனர். சிலர் இரண்டகர்களாகி விட்டனர். எனவே நான் இதனை பொறுப்பேற்றுச் செல்கின்றேன். " இவ்வாறு அவர் கூறுகின்ற பொழுது பெரியாரின் நினைவு நமக்கு வருகின்றது. " நான் கொண்ட இந்தப் பகுத்தறிவு கொள்கையைத் துணிவாகச் செயலாற்றுவதற்கு எவரும் முன்வராத போது நான் என் தோள் மேல் சுமந்து செல்கின்றேன்" என்று பெரியார் ஒருமுறை கூறியிருந்தார்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் உரைகளின் போது தெரிவிக்கும் செய்திகளை நினைவுகூர்கின்ற வேளை விடுதலைப் போராட்டம் எத்தகைய இடர்மிக்கது என்பது புரியும். அவ்விடரினை இன்பமாகக் கருதி போராடுபவனே மாவீரன். விடுதலைப் போராட்டம் என்பது பஞ்சு மெத்தையில் படுத்துப் பிரண்டு கொண்டு இன்பமாகக் கேட்டுப் பெறுவதன்று. அதனைக் கேட்ட உடனே எவனும் வெற்றிலைத் தாம்பாலத்துடன் விடுதலையைக் கொடுக்கப் போவதுமில்லை. கல்லும் முள்ளும் பள்ளமும் பாதாளமும் காடும் மேடும் நிறைந்த கடும்பாதை; ஓடிவரும் நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போடுவது; வெடிக்கும் எரிமலையைக் கடந்து செல்வது; இந்தப் பாதையில் செல்வதற்கு உயிரச்சம் இருக்கக் கூடாது.

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

எனும் பாரதியின் பாட்டுக்கொப்ப இனி இல்லை என்ற துணிவினைக் கொள்வது விடுதலைக்கு இன்றியமையாதது.

"ஒரு முறை தலைவர் பிரபாகரனை இந்திய உளவு துறை அதிகாரி எல்லாச் சலுகைகளையும் வழங்குகின்றோம் போராட்டத்தினைக் கைவிட்டு விடு, இல்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று மிரட்டினாராம். அதற்கு விடையளித்த தலைவர் அவர்கள் உலகில் யாரை வேண்டுமானாலும் நீங்கள் வென்றிருக்கலாம் ஆனால் என்னிடம் மட்டுந்தான் நீங்கள் தோற்றுப் போகப் போகிறீர்கள், ஏனெனில் எனக்குச் சொத்து சுகங்களின் மீது ஆசை கிடையாது; பட்டம் பதவிகள் மீது ஆசை கிடையாது. எனக்கு என் உயிரின் மீதே ஆசை கிடையாது. எவருக்குச் சொத்து சுகங்களின் மீது ஆசை இருக்கிறதோ, பட்டம் பதவிகளின் மீது ஆசை இருக்கிறதோ உயிரின் மீது ஆசை இருக்கிறதோ அவரை யாரும் விலைக்கு வாங்கலாம். எனவே என்னிடம் மட்டுந்தான் நீங்கள் தோற்றுப் போகப் போகிறீர்கள்" என்றாராம். அவர் சொன்னவாறே எவராலும் வெல்ல முடியாத தலைவராகவே அவர் விளங்குகின்றார்.

7.0 தமிழனைக் கட்டமைத்த தலைவர்

எந்த வகையான ஏமாற்று எத்து சூழ்ச்சி செயல்களுக்கெல்லாமும் வலைந்து கொடுக்காத நெகிழ்ந்து போகாத கொண்ட கொள்கையினை வேட்கையினை நிறைவேற்றித் தீர வேண்டும் என்ற உறுதிவாய்ந்த உள்ளம் அவர்க்கன்றி யார்க்கு வரும். எனவே உலகமே திரண்டாலும் துணிவாக எதிர்த்து நின்றார். உலகத்தின் சூழ்ச்சி வலைகளுக்குள் அவர் சிக்கவில்லை. ஆனால் அவரை எதிர்ப்பதாகக் கூறி கொண்ட வல்லரசு நாடுகளும் சுண்டைக் காய் நாடுகளும் அவர் விரித்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளன. இதனைக் காலத்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

'இயற்கை எனது நண்பன் வரலாறு எனது வழிகாட்டி' என்ற அரிய மெய்யியலுக்குச் சொந்தக்காரர் பிரபாகரன். இயற்கையும் வரலாறும் உண்மையானவை பொய்த்துப் போகாதவை. அவையே இன்று அவர்க்குப் பிற எவரையும் விட மிகப் பெரிய பாதுகாப்பு.

இக்கால் தலைவர் பிரபாகரன் ஏற்றிவிட்ட விடுதலைத்தீ புலம்பெயர்ர்ந்து வாழும் தமிழர் உள்ளங்களில் கொழுந்து விட்டு எரிகிறது. தமிழன் என்ற இனமான உணர்வினை ஆழமாகத் தமிழர் நெஞ்சங்களில் படியவிட்டவர் பிரபாகரன். உலகெங்கும் வாழும் தமிழரிடையே தமிழ் தேசிய் எழுச்சியை எழுப்பி விட்டவர் பிரபாகரன். எத்தனையோ தமிழ் உணர்வளர்கள் தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் அறிஞர்கள் தமிழ்த் தலைவர்கள் கண்ட கனவுகளை எண்ணிய எண்னங்களை ஒரு வடிவுக்கும் கட்டமைப்புக்கும் கொணர்ந்தவர் பிரபாகரனே!

இதனாற்றான் அத்தனிப்பெருந் தலைமகனைப் பார்த்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவ்வாறு பாடுகின்றார்.


அவன்தான் தமிழின வீரன்! - அற்றை
நிலந்தரு திருவில் மாறன் ! - கரிகாற்
சோழன்! இமய நெடுஞ் சேரன்!

சிவன் திரு மால் - எனச் செப்பிடும் முதல்வன்!
சேண் நெடுந் தமிழினப் புதல்வன்! - கடும்பெருந்
தவம் செய்து தமிழ்த்தாய் பெற்றநல் மறவன்
தரையெலாம் சென்றுவாழ் தமிழர்க்கு உறவன்!
(அவன்தான்)

கதிர்க்கையன் எனும் பிரபாகரன் அவன்தான்!
காளையர் வழிபடு தலைவனும் அவன்தான்!
புதிர்க்கொரு புதிர் - அவன்! புரட்சியின் வடிவம்!
பூக்கின்ற விடுதலை விடியலின் படிவம்!
(அவன்தான்)

தலைவர் பிரபாகரன் தன் வலி மாற்றான் வலி, துணைவலி ஆகிய வலிவுகளைச் தூக்கிச் செய்யும் செயல்திறம் மிக்கவர். கால நிலை, இடநிலை, பொருள் நிலை அறிந்து போராட்ட அணுகுமுறைகளை மாற்றியமைக்கும் வல்லமையுடையவர்.

இக்கால் அவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற ஆய்வுகளுக்குள் பலரும் இறங்கியுள்ளனர். அவர் இல்லை என்றே முடிவெடுத்து அறிக்கைவிட்டவரும், அழுதவரும், மகிழ்ந்தவரும், தம் முகத்திரையத் தாமே கிழித்துக் கொண்டவரும் பலர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் மேற்கண்ட பாடலிலேயே பின் வரு வரிகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே எழுதியுள்ளமை கவனிக்கத் தக்கது.

நிலத்தினைக் குடைந்து - உள்ளே புகுந்து வாழ்வானோ!
நிலாவினில் சென்று - அவன் மறைந்து வாழ்வானோ?

புலத்தினை விடுவிக்கும் கோள் அவன் கோளே!
புறப்பகை வென்றிடும் தோள், அவன் தோளே!

கார்த்திகை எனும் நளி மாதத்தில் பிறந்தான்!
காத்திடும் இனநலப் போரினில் சிறந்தான்
ஆர்த்திடும் புலியெனக் களத்தினுட் சென்றான்!
அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்றான்!



(அவன்தான்)


அனைத்துத் தமிழர்க்கும் தலைவனாய் நின்று காலத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கும் ஆற்றல் படைத்த ஆன்ம வலிவுள்ள மாபெரும் தலைவனைப் பெற்றதால் நாம் பெருமைபடுகின்றோம். இது உலகத் தமிழினம் இந்தத் தலைவனின் பின்னால் அணிவகுத்து நிற்கும் காலம். ஆயிரம் கைகள் மறைத்து ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை! வெல்க தமிழீழம்!



தொடரும்

Tuesday, November 10, 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 19 ஆண்டுகால மாவீரர் நாள் வரலாற்று உரை ஆவண நூலாக வெளியிடப்பட்டுள்ளது.


தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 19 ஆண்டுகால மாவீரர் நாள் வரலாற்று உரை ஆவண நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு வரை மேதகு தேசியத் தலைவர் அவர்களின் அரிய உரைகள் தமிழ் நாட்டில் கதிர்மதி பதிப்பகத்தால் மிகச்சீரிய முறையில் தொகுக்கப் பெற்று நூலாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நூலின் வாயிலாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுத் தேவைகளையும் தமிழ் மக்களும் விடுதலைப் போராளிகளும் ஆற்றிவந்துள்ள ஈடு சொல்ல முடியாத ஈகங்களையும் தமிழீழத் தேசியத் தலைவரின் அசைக்க முடியாத உறுதிவாய்ந்த கொள்கை வேட்கையினையும் தெளிவாக அறிய முடிகின்றது. தமிழ் கூறு நல்லுலகத் தமிழர் கரங்களில் மட்டுமல்லாமல் விடுதலையை வேண்டி நிற்கும் ஒவ்வொரு மாந்தனிடத்தும் இந்நூல் தவழ வேண்டும்.

தமிழகப் பெருந்தலைவர் ஐயா நெடுமாறன் அவர்கள் இந்நூலுக்கு அரிய அணிந்துரையினை வழங்கியிருக்கின்றார்.

" 1983 ஆம் ஆண்டு மதுரையில் பிரபாகரன் இருந்த போது அவரின் நெருங்கிய தோழர் சங்கர் களத்தில் படுகாயமடைந்து மதுரைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்குத் தக்க சிகிச்சை அளித்து அவர் உயிரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை. தனது தலைவரின் மடியிலேயே மரணத்தை அரவணைத்துக் கொண்டார் சங்கர். அவர் உடல் மதுரையில் எரிக்கப் பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதன் முதலில் களச்சாவை அணைத்துக் கொண்டவர் சங்கர். எனவே அவர் மறைந்த அந்த நவம்பர் 27 ஆம் நாளை மாவீரர் நாளாகக் கொண்டாடும்படி பிரபாகரன் அறிவித்த இந்த ஏற்பாடு என்பது தமிழர்களின் மரபு வழிக்கு ஏற்றதேயாகும். சங்க காலத்திலிருந்து களத்தில் வீழ்ந்து பட்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டிப் போற்றி வணங்குவது தமிழர்களின் மரபாகும். மறைந்து போன அந்த மரபுக்குப் புத்துயிர் கொடுத்தவர் பிரபாகரன். அந்த மரபு வழியிலேயே இன்றைக்கு மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. 1989 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளையொட்டி பிரபாகரன் ஆற்றும் பேருரைகள் புகழ்பெற்றவையாகும். சிங்கள் அரசு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே அந்தப் பேருரைகளில் பிரபாகரன் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய மிக்க எதிர் பார்ப்புடனும் கவனத்துடனும் காத்திருந்தனர். ஆண்டு தோறும் வெளியான அந்தப் பேருரைகள் வரலாற்றுக் கருவூலமாகும். போர்க்கலையில் மட்டுமல்ல இராசதந்திரக் கலையிலும் அவர் எவ்வளவு தேர்ச்சி பெற்றவர் என்பதை அந்தப் பேருரைகள் வெளிப்படுத்துகின்றன. அந்தப் பேருரைகள் ஒவ்வொன்றும் தமிழர்களுக்கு உணர்வையும் எழுச்சியையும் ஊட்டுபவை. எவ்வளவு ஆழமாகவும் தொலைநோக்கோடும் சிக்கல்களை அவர் அணுகினார் என்பதற்கு அவை சிறந்த எடுத்துக்காட்டு ஆவணங்களாகத் திகழ்கின்றன." என்று தமது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரிய ஆவணத்தை வெளியிட்ட நற்றமிழ் உள்ளமும் விடுதலை வேட்கையும் தலைவர் பிரபாகரன் மீது ஆழ்ந்த பற்றுள்ளமுங் கொண்ட பதிப்பாசிரியர் மொழிக்காவலர் கோ.இளவழகனார் தம் பதிப்புரையில் ஓர் இடத்தில்

" மாவீரர் கல்லறைகளை உடைத்து அழித்த கொடுங்கோலன் இராபக்சேயும், அவன் துணையும், அவன் மக்களும், அவன் உறவும் அந்த மண்ணில் பூண்டோடு அழியும் காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இந்த நூலினை வெளியிடுகின்றோம்" என்று அறம் பாடுகின்றார்.

" உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் உள்ளங்களில் குடி கொண்டிருக்கும் தமிழர் தலைமகனின் வீர உரைகளை உங்கள் கைகளில் தவழ விடுகின்றோம். இப்பொன்னுரைகளைப் படித்து நெஞ்சில் பதியுங்கள். விடுதலைக் களத்தில் மாற்றான் முன் என்றைக்கும் மண்டியிடாத தமிழர் தலைவனின் வழிநின்று தமிழீழத் தனி அரசு அமைக்க வாருங்கள்." என்று அவர் உலகத் தமிழர்களை விடுதலைக் களத்திற்கு உணர்வு பொங்க அழைக்கின்றார். இவ்வரிய கருவூலத்தை வெளியிட்ட இப்பெருமகனாருக்கு கோடி வணக்கங்கள்.

இந்நூலில், மாவீரர் நாள் செய்முறை குறிப்புகளும் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தனின் அருமைமிகு உரை வீச்சும் புதுவையார் தீட்டிய வரலாற்றில் நிலைநின்ற மாவீரர் நாள் பாட்டும் இணைப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

நம் தலைமையையும் விடுதலையையும் போற்றுகின்ற மறமாண்புமிக்க தமிழினமே இல்லந் தோறும் இந்நூலினை வாங்கிப் பயின்று உள்ளந்தோறும் வாழுந்தோறும் போற்றுவாயாக.

நூல் வேண்டுவோர்

muthanmozhi@yahoo.com.my என்ற மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்க.

நூலின் விலை மலேசிய வெள்ளி 40 (RM 40.00 )

அன்புடன்

இரா. திருமாவளவன்
மலேசியா.

Sunday, November 8, 2009

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கான சிறப்பு மலருக்கு விளம்பரம் வேண்டுகை

உலகத் தமிழர் பேரமைப்பு 7 ஆம் ஆண்டு நிறைவு விழா ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடாக எதிர்வரும் 26 - 27 திசம்பர் 2009 காரி ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ நாடு தஞ்சையில் சீரிய முறையில் நிகழவிருக்கின்றது.

இம்மாநாட்டிகாகச் சிறப்பாக வெளியிடப்பெறும் மலர் தமிழீழ மக்களின் வாழ்வுரிமையினை வெளிக்காட்டும் அரிய செய்திகள் அடங்கிய கருவூலமாக அமையவிருக்கின்றது.

இம்மலருக்கு பக்க விளம்பரங்கள் தேவைப் படுகின்றன. தமிழ், தமிழீழ உணர்வாளர்கள் இம்மலருக்குப் பக்க விளம்பரம் வழங்கி உதவுமாறு வேண்டுகின்றோம்.


  • மேல் அட்டை உள்பக்கம் (வண்ணம்) ரூ 15,000
  • அட்டை உள்பக்கம் (வண்ணம் ) ரூ 10,000
  • மலர் முழுப்பக்கம் (கருப்பு வெள்ளை ) ரூ 4,000
  • மலர் அரைப் பக்கம் (கருப்பு வெள்ளை ) ரூ 2000
  • மலர் கால் பக்கம் (கருப்பு வெள்ளை) ரூ 1000
விளம்பரத்திற்குரிய விளக்கத்தினை எழுதி பணத்தை வரைவோலையாக

உலகத் தமிழர் பேரமைப்பு (world Tamil federation )
6 தெற்கு மதகுத் தெரு,
கோட்டூர்புரம்
சென்னை 600 085
தமிழ்நாடு

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

மேல் விளக்கங்களுக்கு 91 - 44 -6512-9624 என்ற தொலைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்க.