தொடர்பாளர்கள்

Monday, June 29, 2009

தமிழ் நெறி மாணவர் பயிலரங்கு காட்சிகள்









































































அண்மையில் மலேசியா கெடாவில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தால் நிகழ்த்தப்பெற்ற மாணவர் பயிலரங்கப் படங்களில் மேலும் சிலவற்றைக் காண்க.

ஈழ நிலவரங்கள் பற்றிய உண்மை செய்திகளை அறிய இந்த வலைப்பூவினைக் காண்க.



http://meivilampi.blogspot.com/



விடுதலை ஒன்றே உயிர் மூச்சு


நண்பர்களே! மெய்விளம்பி எனும் ஒரு வலைப்பூ புதிதாகப் பூத்துள்ளது. இந்த வலைப்பூ மறைக்கப்பட்ட தமிழர் நியாயங்களையும் களையெடுக்கப்பட வேண்டிய துரோக முகங்களையும் வெளிக்கொணரவே பூத்துள்ளது.

நீங்களும் இந்த உண்மைகளை மெய்விளம்பி மூலம் அறிந்து கொள்ளுங்கள்.


நன்றி

மெய்விளம்பி - விடுதலை ஒன்றே உயிர் மூச்சு



Thursday, June 25, 2009

கடவுள் நிலையில் மாந்தரின் அறிவும் அறியாமையும்


கடவுள் நிலையில் மாந்தரின் அறிவும் அறியாமையும்



தமிழ் நெறி ஞாயிறு அமரர் பாவலர் திருமாலனார்



மதக் கொள்கையினர் : கடவுள் உண்டு என்று உணர்தற்கியலாமல் வெறும் நம்பிக்கையைக் கொண்டு அத்தன்மைக்கு உருவம், குணம் , செயல் என்பதாகக் கற்பித்துக் கொண்டு மாந்த வாழ்வே இறைமையின் இயங்கு - இயக்க நிலையாக உள்ளதைத தங்கள் அறியாமையால் தமது இயக்க உணர்வையே உணர முடியாத நிலையில் எண்ணற்ற இன மொழி நாடு கலைப் பண்பாடு போன்ற வேற்றுமைகளைக் கொண்டு அதனை உணரத தக்க நிலையினின்று முற்றாக முரணிய கருத்துகளால் அவர்கள் செய்கின்ற இறைவழிப்பாட்டால் கடவுள் என்பதை உண்மையிலேயே உணராதக் கரணியத்தால் இறை இல்லை என்றாக்குவதே மதக் கொள்கையினரின் செயலாக உள்ளது. அதற்கு அவர்கள் கூறும் உண்டு என்னும் நம்பிக்கையே ஆத்திகம் என்று நம்பி இறைமையை இல்லாமல் ஆக்குகின்றனர். அதாவது இவர்களின் கடவுள் நம்பிக்கையில் அறிவு சான்ற மெய்யுணர்விற்குச சற்றும் இடமின்மையால் இல்லை என்று கூறுவோர்க்கு அடிப்படை ஆக்கம் தருகின்றவர்களாக மத நம்பிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். உண்மையில் அகத்திலும் புறத்திலும் இவர்களே நாத்திகர்களாக இருக்கின்றனர்.


அறிவியலாளர்கள் : மேற்கண்ட மதக் கொள்கையினர்தம் அறியாமைத் தன்மையைத தங்களின் அறிவால் மட்டும் ஆய்ந்து பார்த்து அவை பொய்யானவை என்று தெளிந்து மெய்யுணர்வுப் பெறாதக் கரணியத்தால் மதக் கொள்கையினரால் கற்பனையாகக் கொள்ளப் பெற்ற கடவுள்களை இல்லை என்று சொல்வதையும் அதனால் இவர்கள் மதக் கொள்கையினருக்கு எதிர்புறமாக நிறுத்தப் பெற்று மதக் கொள்கையினரால் நாத்திகர்கள் அதாவது அவர்கள் கூறும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஆதலால் அவ்வாறு அழைக்கப் பெறுகின்றனர்.
இவ்வறிவியல் கொள்கையாளர்கள் எதிலுமே முற்றாக நிலைத்து நிற்கும் நம்பிக்கையற்றக் கரணியத்தால் அதாவது உண்மை எது எப்படி என்ன என்பதைக் காண வேண்டும் என்ற அறிவின் இடையறா உந்துதலால் முயன்றும் அதற்கு முடிவு காண முடியாமற் போகும் போது கடவுள் இல்லை என்று கூறுவதையும் (அதாவது மதக் கொள்கையினர் கூறும் கடவுளை )அதனால் இவர்கள் மதக் கொள்கையினர்க்கு எதிர்ப்புறமாக நிற்பதையும் அம்மதக் கொள்கையினரால் நாத்திகர்கள் அதாவது கடவுள் என்பதாக அவர்கள் கூறும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்று அழைக்கப் பெறுகின்றனர்.
இவர்கள் எதிலுமே முற்றாக தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாதக் கரணியத்தால் மாந்த வாழ்வின் கட்டுப்பாட்டையும் மீறிய இன, மொழி , கலை, பண்பாடு போன்ற மாந்த நிலைகளில் நம்பிக்கையற்று ஆனாலும் உண்மையான நெறி வழிகளில் தங்களை மனத்தை அடக்கி உலகியல் நிலைக்கே பொதுமையானக் கருத்துகளைத் தருகின்றவர்களாக இவர்கள் தங்களுக்குள் இயங்கும் இறைமை அல்லது கடவுள் உண்டு என்பதற்குச் சான்றாக விளங்குகின்றனர். இவர்களை நாத்திகர்கள் என்று கூறுபவர் கடவுள் நிலையை உணர்ந்ததாகப் பொய்யாகக் கருதிக் கொண்டிருக்கும் மதக் கொள்கையினர் ஆவர். உண்மையில் உலகியல் வாழ்வு நிலையைப் பொதுமையானதாக்கும் இவர்களே உண்மையான ஆத்திகர்கள்.
சமயம் (அல்லது) மெய்யுணர்வாளர்கள் : மேற்கண்ட இரு கூறுபாடுகளையும் தமக்குள் தாமே உய்த்துணர்ந்து புறப்பாடும் அகப்பாடும் தாமாகவே இருப்பதைக் கண்டுணர்ந்து அதுவே கடவுள் நிலை அதாவது தாமே அனைத்துமாக இருப்பதைக் கண்டுணரும் மீமிசை நிலைக்குக் கடத்துகின்ற இயக்கமே கடவுள் நிலை என்பதை அறிவும் உணர்வும் அளவோடு கலந்து தாமே உலகும் மற்றவையும் என்றும் உலகும் பிறவும் தாமே என்பதாகவும் உணரப் பெற்று வாழ்வியல் நிலை கடந்து தாமே வாழ்வாக இருப்பதை உணர்ந்து பக்குவமடைதலால் சமயம் என்பதாக உணர்ந்தவர்கள் ; இவர்கள்தாம் மெய்யுணர்வாளர்கள். இம் மெய்யுணர்வால் மேற்கண்ட இரு திறத்தினரையும் விட்டு விலகி நிற்கும் விளக்கமாக விளங்குபவர்கள். இறைமை என்பது என்றோ அன்றே இவர்களும்.
காலம், இடம் சூழ்வினைகளைக் கடந்து நிற்பவர் இவர்களாதலால் இவர்களைத்தான் அதாவது இவர்களின் இயக்க நிலைகளே கடவுள் என்பதாக உணரப் பெறும். இம் மெய்மம் தமிழர்தம் பெற்றியர் சமயத்தில் இறைமை , உயிர், தளை, என்பதாக உணரப் பெறுகின்றது. இதில் தளை என்பது மதக் கொள்கையினரின் அடிப்படையாக உள்ள உலகியல் நிலை. உயிர் என்பது உலகியல் நிலைக்கு அடிப்படையாகி விளங்கும் பரத்துவ நிலை. இறைமை என்பது உலகியல் நிலையையும் அதற்கு அடிப்படையாக விளங்கும் பரத்துவமும் கலந்து அதனையும் கடந்து தாமாக விளங்கும் விளக்கப் பொருளாகி நிற்கும் மெய்யுணர்வு மெய்மம் எனப்பெறும் உண்மை நிலையாகும்.
இவ்வுண்மையானது பரத்துவ நிலையில் அகப் பொருளாகத் தோன்றியும் உலகியல் நிலையில் (தளை) அகத்தே தோன்றாமையுமாகி இயங்கும் தன்மையே இறைநிலையாகும். இவ்விறைமை நிலையே தோன்றா நிலையில் ஆற்றலாக உள்ள இயக்க ஊற்றாகும்.
இந்நிலைகளை புலன் கடந்த மெய்யறிவுத் தன்மையால் பக்குவம் பெற்ற பெற்றியர்கள் அல்லது மெய்யுணர்வாளர்கள் உணர்வதன்றி மதம் - அறிவு அதாவது உணர்வு அறிவு இவ்விரு கூறுகளின் தனித் தனி முறைகளால் உணர முயல்பவர்களால் உணர வியலாது. அறிவும் உணர்வும் தகு நிலையோடு கலந்தியங்கும் மெய்யுணர்வே கடவுள் நிலையாகும்.
இது ஒன்றே மாந்த வாழ்வின் அடிப்படை நெறியாகும். அனைத்திலும் இது உணரப் பெறும் போது வாழ்வு எனப் படும் உலகியல் தன்மை மாந்த நிலையில் இல்லாமல் போகும். இதுவே முதிர் நிலை என்பதாகக் கூறுவதே உணர்த்துவதே பெற்றியர் சமய மெய்மமாகும். இதுவே வாழ்வு எனும் முதிர் நிலையாகும்.
ஆகவே உண்டு என்று கூறுவோர் உள்ளத்தால் இல்லை என்றாக்குவதும் இல்லை எனக் கூறுவோர் தங்களை அறியாமலேயே உள்ளத்தால் உண்டு என்று ஆக்குவதும் வெளிப்படையாகிறது. உண்மையான மெய்யுணர்வாளர்களே உண்டு இல்லை எனும் தன்மையை உணர்த்துவதுடன் உண்டு இல்லை என்னும் உலகியல் நிலையில் கலந்து நிற்கும் மெய்யுணர்வே கடவுள் நிலை என்பது இதனாற் பெறப்படும் மெய்மமகும்.
முற்றும்

Friday, June 19, 2009

கோலாலும்பூரில் நடத்தப் பெற்ற மறைமலை அடிகள் விழாவில் இரா.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய அரிய தமிழ் எழுச்சி உரையைக் காண்க.
http://www.youtube.com/watch?v=dQ70HkWfim8

Monday, June 15, 2009

கடந்த ௨௪ .0௫ .௨௦௦௯ (24.05.2009) ஆம் நாள் மலேசியாவில் பத்துமலை முருகன் திருத்தலத்தில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு பேரணியில் மலேசிய தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா .திருமாவளவன் அவர்களின் உணர்ச்சி மிகு பேச்சு. இங்கே சொடுக்கவும் .
http://youtube.com/user/TamilEelamme

Sunday, June 14, 2009

மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தமிழ் நெறி மாணவர் இளந்தையர் பயிலரங்கு 2009சிறப்பாக நடந்தேறியது.











மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தமிழ் நெறி மாணவர் இளந்தையர் பயிலரங்கு 2009சிறப்பாக நடந்தேறியது.

சென்ற 7.6.2009 முதல் 9.6.2009 வரை கெடாவில் அமைந்துள்ள சிக், பெண்டாங் மான் கெடா எனும் ரிசோர்ட்டில் தமிழ்நெறி மாணவர் இளந்தையர் பயிலரங்கு மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. ஏறக்குறைய 70 மாணவர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றனர். முழுக்க முழுக்க தமிழ் மாணவர்களை மேம்படுத்துவதற்கும் தமிழினத்தைக் கட்டிக்காக்கக் கூடிய சிறந்த தலைமைத்துவமிக்கவர்களாக உருவாக்குவதற்காகவும் இப்பயிலரங்கு நடைப்பெற்றது.இது 3 ஆவது முறையாக மலேசிய தமிழ்நெறி கழகத்தால் நடத்தப்படுகின்ற பயிலரங்காகும். இக்கழகத்தின் தலைவரான பாவலர் ஐயா இரா. திருமாவளவன் அவர்களின் ஆலோசனைப்படியும் முயற்சியின் பாலும் இந்த இளந்தையர் பயிலரங்கு நடைப்பெற்று வெற்றி கண்டது என்பதில் மிகையில்லை.

பல பயிற்சிகளும் விளையாட்டுகளும் உள்ளடங்கிய இந்நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் உள்ளக்களிப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல் நாளன்று 3 மணி தொடங்கப்பட்ட இந்நிகழ்வு மாணவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. முதலில் பனிப்பாறை உடைத்தலும் பிறகு தமிழர் விளையாட்டும் குழு உருவாக்கம் போன்ற நிகழ்வுகளும் மாணவர்களை இன்னும் வலுப்படுத்தியன. மாணவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.ஒவ்வொரு குழுவிலும் 10 மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் தலைவரும் செயலாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உள உரப் பயிற்சி, உடல் உறப் பயிற்சி, நள்ளிரவு தனிமைப் பயிற்சி, ஓடை நடைச் செலவு காட்டு நடைச் செலவு, அருவி குளிப்பு, பல்வகை உளவியல் விளையாட்டுகள் என மாணவர்களுக்கு களிபையும் நன்மையையும் தந்த நடவடிக்கைகள் வழங்கப் பட்டன.

ஏடலர் தமிழழகனார் மாணவர்களுக்கு பல விளையாட்டு நடவடிக்கைகளை வழங்கினார். தேசியப் பொருளர் மு.தமிழ்வாணன் பண்பாட்டுச் சீர்கேடுகள் பற்றிய எழுச்சியுரை நிகழ்த்தி மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டினார். தேசிய உதவித் தலைவர் மு.கனலன் அவர்கள் மாணவர்களின் பாதுகாப்பிலும் நலனிலும் முழு பொறுப்பெடுத்து கவனம் செலுத்தியதுடன் பயிலரங்கில் கலகலப்பையும் ஏற்படுதினார். மலாயாப் பல்கலைக்கழக மாணவர் கன்னித்தமிழனும் தமிழ்ச்செல்வனும் மாணவர் குழு கண்காணிப்பாளர் பொறுப்பேற்றுத் திறம்படச் செயல்பட்டனர். ஏனைய பொறுப்பாளர்களாகிய மன்னன், பத்துமலை, குமரன், பெரியவர் திருமுகம், பாடங்செறாய் கிளை மகளிர் பொறுப்பாளர்கள் பலரும் இப்பயிலரங்கு வெற்றி பெற பெரிதும் உழைத்தனர்.

செய்தி: அருள்விழி, அருள்நங்கை

Friday, June 5, 2009

தமிழ்நெறி மாணவர் இளந்தையர் பயிலரங்கு 2009







மலேசியாவில் பன்னெடுங் காலமாக இயங்கி வரும் தனித்தமிழ் இயக்கமான மலேசியத் தமிழ்நெறிக் கழகம் எனும் அமைப்பு இவ்வாண்டிற்கானத் தமிழ்நெறி மாணவர் பயிலரங்கினைச் சிறப்பான முறையில் நிகழ்த்துகின்றது.

இந்நிகழ்வு தமிழ்நெறி மாணவரிடையே பொறுப்பாண்மை உணர்வையும் மொழி இன மான உணர்வெழுச்சியினையும் தமிழின வரலாற்றுத் தெளிவினையும் ஊட்டும் நோக்கில் நிகழ்த்தப் படுவதாகும்.

7.6.2009 தொடங்கி 9.6.2009 வரை மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள கெடா ரிசோட்டில் இந்நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. இதில் நாடு முழுமையிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

புறப்படட்டும் புலிகள்

புறப்படட்டும் புலிகள்
பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்நாட்டு விடுதலை தமிழ்ப்புலவர் விடுதலை!
நமக்கென்ன என்றிருப்பாரோ புலவர்
நமக்கென்ன என்றிருப்பாரோ (தமிழ் )

தமிழைப் பேச உரிமையும் இல்லை!
தாயை வாழ்த்தினும் வந்திடும் தொல்லை!

தமிழ்மொழி எல்லாம் வடமொழி என்று
சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று!
தமிழ்மொழி எல்லாம் தமிழ்மொழி என்று
சாற்றுவார் தமிழர்கள் மெய்யிலே நின்று!
தமிழ்ப்பகைப் பார்ப்பனர் அடைவது நன்மை
தமிழ்ப்புலவோர்கள் அடைவது தீமை (தமிழ்)

நற்றமிழ் என்பது தில்லிக் காகாது!
நம் அமைச்சர்க்கும் காதுகே ளாது!
புற்றிலே மோதினால் பாம்புசா காது!
புறப்படட்டும் புலிகள் இப்போது! (தமிழ் )

தமிழ்விடுதலைப் போரைத் தட்டிக் கழிப்பதா?
தட்டியே மனைவியின் முகத்தில் விழிப்பதா?
தமக்குள்ள பெருமையைத் தாமே அழிப்பதா?
தமை ஈன்ற தாயின் குடரைக் கிழிப்பதா? (தமிழ் )

ஆட்டிப் படைப்பவர்க் கஞ்சுதல் வேண்டா!
அமைச்சர் என்பார்க்கும் அஞ்சுதல் வேண்டா!
காட்டிக் கொடுப்பார்க்கும் அஞ்சுதல் வேண்டா!
கருத்திலாக் கட்சிகட்கும் அஞ்சுதல் வேண்டா! (தமிழ் )

Thursday, June 4, 2009

வீழ்ச்சியுறும் தமிழினத்தில்

வீழ்ச்சியுறும் தமிழினத்தில்
எழுச்சி வேண்டும்

தமிழனென்று சொல்ல என்னையா வெட்கம்?

இரா.திருமாவளவன்

இக்கால் தமிழினத்தில் நேர்ந்துள்ள பாதிப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல எடுத்துச் சொல்ல தமிழினத்திற்குரிய அடையாளத்தை பெரும்பாலோர் இழந்து வாழ்கின்றனர்.இழந்து வாழ்கின்ற இழிவுடன் இவ்வினத்திற்கு நேர்கின்ற எத்தகு இன்னல்களையும் உணராதவர்களாயும் அப்படியே தெரிந்தாலும் அதுபற்றி அக்கறை இல்லாதவர்களாயும் எங்கே என்ன நடந்தால் எனகென்ன என்ற பொறுப்பற்ற எண்ணத்தினராயும் தமிழர்கள் வாழ்கின்றனர்.மொத்தத்தில் தமிழன் தமிழனாக வாழவில்லை.தமிழனிடத்தில் தமிழன் என்று அழைக்க வேண்டும் என்பதற்காகவே போரட வேண்டியிருக்கிறது.


மலேசியாவில் அரசியல் பட்டயத்தில் தமிழருக்குத் தமிழர் என்று பெயர் கிடையாது. இந்தியாவிலிருந்து இங்குக் குடிப்பெயர்ந்த மக்களுக்குள் 85 விழுக்காட்டினர் தமிழர்கள். எஞ்சியோர் ஏனைய மொழி பேசும் மக்கள். இந்த எஞ்சிய 15 விழுக்காட்டு மக்களுக்காக நாம் தமிழர் என்று அழைக்கக் கூடாது; நாம் நம்மை இந்தியர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று தமிழனே கூறிக் கொண்டிருக்கிறான். சிலர் தமிழர் என்று சொல்வது குறுகிய மனப்பான்மை என்கின்றனர். அடிமை போக்கும் எண்ணமும் கொண்ட உணர்விழந்த அகக்குருடர்களால் தமிழன் என்ற வரலாற்றுப் பெயர் குறுகிய வட்டமாக்கப்பட்டுள்ளது. இதைவிட பேரிழிவு எங்கேனும் உண்டா? இந்தியன் என்பது இனப்பெயரா? மொழி வழி வந்த பெயரா? அந்தச் சொல்லைப் பிரித்தாலே இந்தி - அன் என்றுதான் வரும். இதில் அடங்கி இருக்கின்ற மொழிப்பெயர் இந்தி என்பதே. இது எப்படித் தமிழனுக்குப் பொருந்தும். செர்மன் மொழி பேசுவோர் செர்மானியர் என்றும்; மலாய் மொழி பேசுவோர் மலாயர் என்றும்; பிரஞ்சு மொழி பேசுவோர் பிரஞ்சியர் என்றும், அழைக்கப்பெறுவதைப் போல தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரைத் தமிழர் என்றுதான் அழைக்க வேண்டும்.


இங்குக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வருந்தத்தக்க செய்தி என்னவென்றால் தமிழன் என்றே சொல்லக்கூடாது என்று வரலாறு அறியாத அறிய விரும்பாத சிலர் தமிழரிடமே கூறித்திரிவதும் அவரோடு சேர்ந்து தமிழரும் அவ்வாறு அழைக்கக்கூடாது என்பதுதான்.

இந்நிலையில் திட்டமிட்டே சிலர் இப்பரப்புரையினை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய ஆரிய அடிமையாய் விளங்கிக் கொண்டிருப்பவரும் தமிழர் அல்லாத சிலருமே இவ்வேலையைச் செய்கின்றனர். இவ்வாறு செய்தால் தமிழர் என்ற மொழி இன உணர்வைச் சிதைத்து விடலாம் என்பதும் அதன் வயிலாகத் தமிழரை என்றென்றும் ஆளுமை செய்யலாம் என்பதும் இவர்களது கனவு. தமிழினம் தனித்தேசிய இனமாகும். வரலாற்றுக் காலத்துக்கும் முற்பட்டக் காலத்திலிருந்து இன்றுவரை தனித்து அடையாளங் கூறப்பட்ட இனப்பெயரே தமிழன் என்பது. கிரேக்கர்களும் ஏனைய பிற மக்களும் தமிழரைத் தமிரிகே, தமிழி, தமிரிசு, தம்லுக், சீ மோ லோ என்று அழைத்துள்ளனர். திராவிடர் என்ற சொல்லும் தமிழர் எனும் சொல்லிலிருந்து மருவியதுதான். வரலாற்று ஆய்வின்படி தமிழர் என்பதே தமிழரின் தனி தேசிய பெயராகும். இந்தியன் எனும் சொல் பிற்காலத்தில் சிந்து எனும் சொல்லிலிருந்து பாரசீகர்களால் உருவாக்கப்பட்டது. சிந்து- ஹிந்தஸ்- ஹிந்தி - ஹிந்தியன் என்பதே அதன் சொல் வளர்ச்சி. பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஒருசேர ஆள வேண்டும் என்ற எளிமை நோக்கில் இந்தியா என்றும் அந்நாட்டில் வாழ்பவரை இந்தியர் என்றும் அழைத்தனர்.

தமிழரின் சங்க இலக்கியங்களிலோ பத்தி இலக்கியங்களிலோ வட நாட்டு புராணங்களிலோ இந்தியர் என்ற சொல்லைக் காட்ட முடியாது. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பே இந்தியா என்கின்ற நாடும். இந்தக் கூட்டமைப்பில் வாழ்கின்ற ஏனைய இனங்களில் பல இந்தியர் என்றே அழைத்துக் கொள்வதில்லை; “பஞ்சாபியர்” தங்களைத் தனித் தேசிய இனமாக அறிவிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விட்டனர். மலேசியாவில் வாழ்கின்ற சீக்கியர் ஒரு போதும் இந்தியர் என்று அழைத்துக் கொள்வதில்லை.

தமிழன் மட்டும் எங்கும், எப்பொழுதும் இளித்தவாயனாக, அடிமையிலும் அடிமையாக கொஞ்சமேனும் இன உணர்வு இல்லாதவனாகக் கிடக்கின்றான். தமிழர் தங்களை இந்தியர் எனும் போலிக் கூட்டுக்குள் அடைத்துக் கொள்வதாலும் அடைந்திருப்பதாலும் தன்னின மேன்மைக்குரிய அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளனர்; இழந்து கொண்டுள்ளனர். இந்தியர் கூட்டுக்குள் அடைப்பட்ட தமிழன் அடுத்தவனுக்கு வாய்ப்பைக் கொடுத்துவிட்டு, இழந்துவிட்டு ஓட்டாண்டியாய் வாழும் நிலையே தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலை மாற நாம் தமிழர் என்ற சிந்தனைக்குள் தமிழர் ஒருங்கிணைய வேண்டும். எங்கும் எதிலும் தம்மைத் தமிழர் என்றே அழைக்க் வேண்டும். குறிக்க வேண்டும்.

தமிழியன் :- என்ன செய்வது சொந்த இனப் பெயரையே மறந்து போன வெட்கக் கேட்டைத் தமிழினத்தைத் தவிர உலகில் வேறு எந்த இனத்திலும் காட்ட முடியுமா? உணர்வானா தமிழன்?

Wednesday, June 3, 2009

பழைய காலம் பொற்காலம்

பழைய காலம் பொற்காலம்


பழைய காலம் பொற்காலம் - தமிழா

புதிய காலம் கற்காலம்

சிந்தனை செய்தால் எதிர்கால்ம்

சிறப்பாய் வாழ்வாய் நற்கால்ம்

அறிவை வளர்த்தாய் அறத்தைச் செய்தாய்

ஆளும் இனமாய் உலகில் வாழ்ந்தாய்

அரிய நூல்கள் பலவன செய்தாய்

அவனி தழைத்தது அக்காலம்

அறிவை கெடுக்கும் வழியினைத் தொட்டாய்

அடிமை சகதியில் சிக்கித் தவித்தாய்

சிறுமை சேர்க்கும் நூல்கள் புகழ்ந்தாய்

பெருமை இழந்த்து இக்காலம் (பழைய )

உலகில் மூத்தச் செந்தமிழ் மொழிந்தாய்

உலகெலாம் போய் வாணிகம் செய்தாய்

அயல்மொழி யில்பார் உன்மொழி வேர்கள்

வியந்தது உலகம் அக்காலம்

சங்கத் தமிழைத் தூக்கி எறிந்தாய்

சங்கத மொழியைத் தெய்வம் என்றாய்

ஆங்கிலம் கலந்து தமிழைச் சிதைத்தாய்

அடிமையானது இக்காலம் (பழைய)

வானியல் உண்மைகள் வாழ்வியல் மெய்மைகள்

வானம் அளந்த ஆட்சித் திறமைகள்

இலக்கிய இலக்கண செம்மை வளமைகள்

எல்லாம் சிறந்தன் அககாலம்

சோதிட்ப் புரட்டுகள் போலிப் புனைவுகள்

வீதிக்கு வீதி புராணக் குப்பைகள்

பாலியல் வெறிமைகள் கழிசடைப் புதுமைகள்

பழிகள் நிறைந்தது இக்காலம் (பழைய )

மானம் நாணம் சூடு சுரணைகள்

மாண்பு பண்பு அறம்சார் வீரம்

ஒழுக்கம் நேர்மை தூய்மை சீர்மை

ஓங்கி வளர்ந்தது அக்காலம்

மானங் கெட்டு வெட்கங் கெட்டு

மண்டை முழுவதும் இருளைச் சேர்த்து

தமிழன் என்னும் பேரும் கெட்டு

தறிகெட் டிழிவது இககாலம் (பழைய காலம்)

இரா.திருமாவளவன்