
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு
தமிழீழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு தமிழ் நாடு தஞ்சையில் எதிர்வரும் திசம்பர் திங்கள் 26, 27 - 12 - 2009 ஆம் நாள் ஐயா பழ.நெடுமாறன் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெறவிருக்கின்றது. இம்மாநாட்டில் உலகத் தமிழர் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஈழத்தமிழர் வரலாறு, போராட்டம் குறித்த முழுமையான செய்திகள் அடங்கிய ஆவணக் களஞ்சியமாக மாநாட்டு மலர் அணியமாகின்றது. உலகத் தமிழர்களின் கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய மலராக இது வெளிவரும். இது தொடர்பான விளம்பர அறிக்கையை விரைவில் காண்க.
No comments:
Post a Comment