தொடர்பாளர்கள்

Saturday, July 4, 2009

உயிர்க்கு உயிர்மை


காற்றாகி மண்ணாகி
ஒளியு மாகி
கடலுக்குள் நீராகி
வெளியுமாகி
கூற்றாகி பகைவனுக்குத்
தீயுமாகி
ஊற்றாகி தமிழுக்குக்
காவலாகி
நேற்றாகி இருந்தஎம்
அடிமை போக்கை
நூற்றாக்கி ஒளிவாழ்வைத்
தந்தோன் நெஞ்சில்
ஆற்றாகி உயிர்ப்புக்கு
உயிர்மை தந்த
தற்கொடையே தமிழீழ
அறமே போற்றி!

இரா.திருமாவளவன்


இன்று ௫.0௭.௨00௯ ஆம் நாள் தமிழீழத் தற்கொடையாளர் நாள் . மீண்டும் உயிர்த்தெழுவோம் . எம் உயிரான இலச்சியத்தை அடைவோம்.

No comments:

Post a Comment