தொடர்பாளர்கள்

Friday, June 5, 2009

தமிழ்நெறி மாணவர் இளந்தையர் பயிலரங்கு 2009







மலேசியாவில் பன்னெடுங் காலமாக இயங்கி வரும் தனித்தமிழ் இயக்கமான மலேசியத் தமிழ்நெறிக் கழகம் எனும் அமைப்பு இவ்வாண்டிற்கானத் தமிழ்நெறி மாணவர் பயிலரங்கினைச் சிறப்பான முறையில் நிகழ்த்துகின்றது.

இந்நிகழ்வு தமிழ்நெறி மாணவரிடையே பொறுப்பாண்மை உணர்வையும் மொழி இன மான உணர்வெழுச்சியினையும் தமிழின வரலாற்றுத் தெளிவினையும் ஊட்டும் நோக்கில் நிகழ்த்தப் படுவதாகும்.

7.6.2009 தொடங்கி 9.6.2009 வரை மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள கெடா ரிசோட்டில் இந்நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. இதில் நாடு முழுமையிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment