தொடர்பாளர்கள்

Wednesday, March 16, 2011

கிரந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம்!

தென்மொழி இதழ், மீனம்,2042

கிரந்தச் சூழ்ச்சியை முறியடிப்போம்!



திரு இரமணசர்மாவும், திரு கணேசனும் கொடுத்த முன்மொழிவுகள் இந்திய அரசால் ஏற்கப்பட்டு ஒருங்குகுறி ஆணையத்திற்கு 06 -09- 2010-இல் அனுப்பியது. இந்திய அரசின் கிரந்த – தமிழ்க் கலப்புக் குழுவில் பங்கேற்ற காஞ்சி மட சர்மா போதும் போதாதற்கு 27-10-2010- அன்று, தனிப்பட்ட முறையிலும் கிரந்த ஒருங்கு குறி வேண்டுமென்று இந்திய அரசின் வரைவை அனுப்பியும் வைத்தார். தவறி அரசியல் அழுத்தங்களின் விளைவாக அரசு திரும்பப் பெற்றாலும் தன் வரைவின் அடிப்படையில் கிரந்தம் இடம்பெற்றாக வேண்டும் என்பதற்காக!

நாம் கேட்டவை என்ன?

மேலும் தமிழக அரசும், ஏன் இந்திய அரசும் எதிர்த்தாலும் கூட கிரந்தக் குறியீட்டை யூனிகோடுதரமாக அறிவிக்கப் போவது என்னவோ திண்ணம். யூனிகோடு குறியீடுகளில் எண்ணற்ற பல பழைய பட எழுத்துகள், சிந்து சமவெளிக் குறிகள் உட்பட, தரப்பாட்டுக்குள் வந்து கொண்டு இருக்கின்ற போது, கிரந்தம் மட்டும் கூடாது என்ற கூக்குரலுக்கு அறிவுசார் சான்றுகள் எவையும் இல்லை. தமிழுக்குக் கேடுசெய்யும் கிரந்தம் வந்தே தீரும்

என்று சில தமிழர்கள் கூறிவருகிறார்கள். காஞ்சிமடமோ, ஆரியக் கூட்டமோ கூறியிருந்தால் கூட அது அவர்களின் கருத்து; எதிர்ப்பது நம் கடமை என்று இயல்பாக எண்ணியிருக்கலாம்!



எதிர்காலத்தில் இந்திய அரசும் கிரந்தத்தையே இந்திய மொழிகளுக்கு (தமிழுக்கும்) எழுத்தாக்கிவிடும் எண்ணம் உள்ளது. இதனை திரு. வா.செ.கு. அவர்கள்,

“காந்தியடிகள் காலம் முதற் கொண்டு தேவநாகரி வரிவடிவத்தை இந்திய மொழிகட்குப் பொது வரிவடிவம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது காலப் போக்கில் வலுவடையக் கூடும். அதற்கு மாற்றான வரிவடிவமானத் திரவிட மொழிக் குடும்பத்தினர்க்குக் கிரந்த வரிவடிவம் அமையக் கூடும் என்பதே என் கணிப்பு.” (வா.செ.கு. – 12-02-2011)



திரு இரமண சர்மாவும் திரு நா.கணேசனும் கூறியதைத் திரும்பப் பெறுவதுபோல் கூறி, இரண்டு பேர் கூறியதையும் இணைத்து கிரந்தத்தைத் தனியே கொண்டுவந்து தமிழ் உள்ளிட்ட தென்னாட்டு மொழிகளை கிரந்ததிற்கு எதிர்காலத்தில் மாற்றத்திட்டமிட்டுள்ளனர். இதற்கு இர்மண சர்மாவும் காஞ்சிமடமும் இந்திய அரசுக்குத் துணைபோகின்றனர்; அறியாத நம்மவர்களும் உடந்தையாக உள்ளனர். தமிழின் வீழ்ச்சிக்கு வித்திட்டது கிரந்தமே என உணரின் அன்றோ தமிழின் மீட்சிக்கு இன்றைய ஆங்கிலமும் கமுக்க கிரந்தத் திணிப்புமே எதிரிகள் என உணரமுடியும்.

“தமிழை நவீனப்படுத்துவதை விட்டுவிட்டு இவர்கள் தமிழை தேவநாகிரிக்கேற்ப மாற்றுகிறார்கள். இது தமிழுக்கு மட்டுமல்ல, தேவநாகிரி மொழி அற்ற சகல மொழிகளையும் மாற்றும் முயற்சியில் தான் இந்திய அரசு ஈடுப்பட்டுக்கொண்டுள்ளது. இந்திய அரசு, ஒட்டுமொத்த இந்திய மொழிகளின் வரிசையை தேவநாகிரி வரிசைக்கேற்ப ஒழுங்கு மாற்றி ஒருங்குறியில் ஏற்றியதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அத்தனை தேவநாகிரி எழுத்துக்களுக்கும், ஒரு "தமிழ்" எழுத்தை உருவாக்கியே இந்த முயற்சியை அவர்கள் கைவிடுவார்கள். ( திரு. காபிடல், கனடா; 28-11-2010 )



கிரந்தம் கலந்த கல்வெட்டுகளின் மூலமாக வரலாற்றை அறியக் கிரந்தத்தை ஒருங்கு குறியில் சேர்க்கவேண்டும் என்று சில தமிழர்கள் கூறுகின்றனர். கல்வெட்டில் உள்ளவை தமிழ் எழுத்துக்களும் , வருக்கக் குறியீடுகளும்தான்! தமிழல்லாத கிரந்தக் குறியீடுகளையும் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ, மேடவாக்கக் கூட்டத்தில் கூறியவாறு அதனைத் தொழில் நுட்பத் துணையுடன் பட வடிவில் (கிளிஃப்) பதிவு செய்து தமிழில் வெளியிடலாம் ! மணிப்பிரவாள நடையில் உள்ள ஈட்டுரைகளைத் தமிழ் எழுத்துகளிலேயே மாற்றிச் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது!அறிவியல், வரலாற்று, பிறமொழிச் சொற்களைத் தவிர்க்கவியலா இடங்களில் குறிக்க வேண்டுமானால், மலேசியக் கணினி அறிஞர் முத்துநெடுமாறன் குறிப்பிட்டது போல மீக்க்குறியெண்களால் குறிக்கலாம்,அல்லது பிரான்சுத் தமிழறிஞர் லெபோ கூறியது போல மொழியியல் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.கிரந்தக் கேட்டை வரவேற்கத் தேவையில்லை.

தமிழில் கலந்துள்ள 6 கிரந்த எழுத்துகளால் தமிழில் எண்ணற்ற பிறமொழிச்சொற்கள் நுழைந்து கேடு செய்து வருவதால் அவற்றைக் களைய நாம் பாடுபட்டுவருகிறோம்; மேலும் பொருந்தாத வடமொழி வல்லொலிகளைத் திணிக்கக் கிரந்தம் வரக்கூடாது; கிரந்தம் ஒரு மொழியில்லை, வழக்கிலும் இல்லை;அது ஒரு மொழியல்ல என்றாலும் கூட, பிற வரலாற்றுக் குறியீடுகள் போல் தனியே வரலாம் என்று நம்மவர்களே எதிரிக்குத் துணைபோகிறார்கள்; அப்படி அக்கிரந்தம் தனியே வரும், வந்தே தீரும் எனில் , எம் தமிழ் எழுத்துக்கள் 31 தமிழ் ஒலிகள் இல்லாமல் வெறும் வர்க்கக்குறியீடுகள் 15 மட்டும் கொண்டு வரட்டும்! தமிழர்களே ! கிரந்ததைத் தடுக்காமல் தூங்காதீர்கள்!ஏமாறாதீர்கள்!

-------------------------------------------------------------------------------------

தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர் இருக்கின்றார் - அவர்
தமிழர்களின் தாலிகளை அறுக்கின்றார்!
கட்சிபேசும்; தலைமை தாங்கும் தமிழால் - பெருங்
கயவர்களின் கூட்டஞ் சேர்க்கும் தமிழால்!
எச்சிலைக்கு நாக்கை நீட்டிப் படுக்கும் - மேல்
இருப்பவர்க்கே இனத்தைக் காட்டிக் கொடுக்கும்!

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

No comments:

Post a Comment