தொடர்பாளர்கள்

Thursday, September 24, 2009

மன நிறைவோடு தமிழகம் திரும்புகிறேன் பழ.நெடுமாறன் பெருமிதம்


மன நிறைவோடு தமிழகம் திரும்புகிறேன் பழ.நெடுமாறன் பெருமிதம்

அண்மையில் மலேசியத் திருநாட்டிற்கு குறுகிய கால வருகை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து பேருரை நிகழ்த்திய தமிழகப் பெருந்தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் மன நிறைவோடு தமிழகம் திரும்புவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு பணிகளை விட்டு விட்டு இங்கு வருகிறோமே என்ற மனத் தயக்கம் எனக்கிருந்தது. ஆனால் இங்கு வந்து மக்களை சந்தித்து தமிழீழ விடுதலை தொடர்பாகவும் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் உறுதியான நம்பிக்கையினை ஏற்படுத்த முடிந்தமையினால் நான் மன நிறைவு கொள்கிறேன். என் வருகை பயனுடைய ஒன்றாக அமைந்ததனால் மகிழ்கிறேன் என்று ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் விடைபெற்றுச் செல்கையில் குறிப்பிட்டார்.

மலேசிய தமிழர் பலர் அவரை சந்திக்கின்ற பொழுதெல்லாம் கேட்கின்ற ஒரே ஒரு கேள்வி, தலைவர் இருக்கிறாரா? எப்படி இருக்கிறார்? என்பதே. ஐயா அவர்கள் எல்லாருக்கும் தலைவர் இருக்கிறார் நலமாக இருக்கிறார் விரைவில் தமிழீழ விடுதலைப் போரினை அவரே தலைமையேற்று நடத்துவார். அவர் தலைமையில் தமிழீழம் உறுதியாக மலரும் என்று நம்பிக்கையோடும் தெளிவோடும் விடை கூறுகின்ற பொழுது மக்கள் பெரு மன நம்பிக்கையோடும் உறுதியோடும் செல்வதை காண முடிந்தது. மொத்தத்தில் அவருடைய வருகையினால் மலேசியத் தமிழர்கள் தலைவர் பிரபாகரன் மீதிருந்த ஆராப் பற்றினை வெளிப் படுத்தி மன உறுதியடைந்தனர் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment