தொடர்பாளர்கள்

Sunday, January 6, 2013

வள்ளுவம் காட்டும் வாழ்க்கை நெறி 3

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும் .

பேசுகின்ற பேச்சுகளை எண்ணிப்பார்த்து பேசாத போது அடக்கமில்லாமல் பிறரைப் புண்படுத்திப் பேசுகின்ற சூழல் உருவாகி விடலாம். ஆயிரம் நல்ல கருத்துகளைக் கூறியிருப்போம் ,அவற்றுக் கிடையே ஏதாவது தீமை பயக்கும் சொற்களையோ பேச்சுகளையோ பேசிவிடாமல் ;அதனால் கேடு உருவாகி விட்டால் ஆயிரம் கருத்துகள் பேசினாலும் எல்லாமே பாழ்பட்டு போய்விடும்.அவ்வளவு நேரம் கூறிய நல்லனவற்றை பற்றி யாரும் பேசமாட்டார்கள் .ஆனால் இடையே உதிர்த்த தீய பேச்சே எல்லாரையும் உறுத்திக்கொண்டிருக்கும். அந்தத் தீய பேச்சால் தீமை விளையும் என்பதால் நல்லன அங்கு மறைந்து விடுகின்றன . எனவே நாம் பேசும் போது எண்ணிப்பார்த்து அடக்கமாக பேசுவதே என்றும் பாதுகாப்பானது .பேச்சு சூழலை மாற்றி யமைக்க கூடியது ;நல்ல ; சூழலை உருவாக்குவதும் உருவாகிய நல்ல சூழலை கெடுப்பதும் பேச்சுதான். எனவே அடக்கமாக பேசுவது என்றுமே பாதுகாப்பானதும் நன்மை தரக்கூடியதும் ஆகும். நாம் உதிர்க்கும் தீய பேச்சுகள் இன்னொரு மனிதரைக் கண்டிப்பாக பாதிக்கும்; எதிர்மறையான அதிர்வளையாகும் ;குழந்தை முதலாகவே அடக்கமாக பேசும் தீய வற்றை புறந்தள்ளும் போக்கினை கைக்கொண்டால் சிக்கல் எழுமா ?.... துன்பந்தான் எழுமா ?....எனவே அடக்கமாகப் பேசுக ,பெருமைக்குரியவராக வாழுக .........................

ஆக்கம் : ஐயா இரா திருமாவளவனார்

No comments:

Post a Comment